Friday, November 12, 2010

அருமையான குழு...அழகான பாடல்....


நா.முத்துக்குமார் வழக்கமாக காதல் பாடல்களில் கலக்குவார்.அவரை பற்றி சொல்லவே தேவையில்லை.இது போன்ற பாடல் புதியது என்றால் அது பாடகர் விஜய் ப்ரகாஷ் இற்கு தான்.இதுவரை காலமும் ஓம் சிவோகம்,ஹோசானா...போன்று சற்று வித்தியாசமான பாடல்கலையே தேர்வு செய்து பாடிக்கொண்டிருந்த இவருக்கு இப்பாடல் சற்று வித்தியாசம்...அதாவது இது கொஞ்சம் பீட் அதிகமான பாடல்...எனினும் சக்கை போடு போட்டிருக்கிறார் விஜய்...இவரது குரலுக்கு இப்பாடல் காண கச்சிதமாக பொருந்தியிருக்கிறது.

அட என்ன பாட்டு னே சொல்லலயா?பாஸ் என்கிற பாஸ்கரன் ல உள்ள ஐலே ஐலே.....தான்..

பாடல் காட்சியாக்கப்பட்ட விதம் சொல்லவே தேவையில்ல...அவ்வளவு சூப்பர்......
நாயகன்,நாயகி யை மிக அழகாக காட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர்.

முத்தத்தை கருவாக வைத்து பாடப்படுகிறது இப்பாடல்.எனினும் எல்லை மீறாமல் நாகரீகத்தோடு ரசிக்கும் படியாக எழுதியிருப்பது நா.முத்துக்குமாரின் திறமைக்கு ஓர் மகுடம்.

யுவனின் இசை நெஞ்சை வருடுகிறது....இது போன்ற பாடல்களை கேட்கும் போது தமிழ் சினிமா வின் trend மாறிக்கொண்டிருக்கிறது என்பது தெளிவாக தெரிகிறது....

ஆகமொத்தத்தில் இப்படிப்பட்ட ஓர் அருமையான பாடலை வெளியிட்டதில் இப்பாடல் சார்ந்த குழுவிற்கு என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

இனி இப்பாடல் வரிகள் உங்களுக்காக என் வலைத்தளத்தில்.


ஐலே ஐலே என் கால்கள் பறக்குதே மேலே...
ஐலே ஐலே வெண் மேகக்கூட்டங்கள் கீழே..

புடிச்சிருக்கு புடிச்சிருக்கு
கொதிக்குது காய்ச்சல் போலே
அணலிருக்கு குளிரிருக்கு-எல்லாமே உன்னாலே
ஒரு முத்தம் தந்து செல்கிறாய் தண்டவாளத்தை போலே...
மறு முத்தாம் ஜோடி கேட்குதே மீண்டும் தீண்டடி மேலே...
இதழ் மொத்தம் ஈரமானது பாரமானதை போலே
ஏதோ ஓர் மோகம்.....இது ஏகாந்த தாகம்....

அந்நாளில் ஆப்பில் தின்றதடி ஏவாள முத்தாம்.
பின்நாளில் ஆண்கள் வம்சத்திலே அதனால் யுத்தம்
எந்நாளும் கேட்கும் நிற்காமல் முத்தச்சத்தம்...
முத்தங்கள் மோதிக்கொண்டால் தான் உலகம் சுத்தும்.
நம் ஆதியும் அந்தமும் முத்தமே முத்தமே.....
முத்தம் தா முத்தம் தா கண்மணி.....
யாரையும் வீரனாய் முத்தமே மாற்றுமே
முத்தத்தால் தாகம் அது மின்சாரமாகும்.....

அன்பென்னும் வேதம் சொல்லுமடி அன்னை முத்தம்.....
அறிவென்னும் பாடம் சொல்லுமடி தந்தை முத்தம்...
ஆகாயம் தாண்டச்சொல்லுமடி காதல் முத்தம்...
அதனால் தான் எங்கும் கேட்குதடி வெற்றிச்சத்தம்.

என் வாழ்க்கையை மாற்றுதே முத்தமே...முத்தமே..
முத்தம் தா...முத்தம் தா...கண்மணி.......
காலமும் நேரமும் முத்தத்தால் மாறுதே....
முத்தத்தால் தேகம் அது மின்சாரமாகும்.....

இப்பாடலை காண இங்கே click கவும்.

No comments:

Post a Comment