Wednesday, December 15, 2010

என் இனிய கல்லூரியே........

இதுவரை என்னால் எழுதப்பட்ட ஒவ்வொரு பதிவிலும் என் நண்பர்களை பற்றி நிச்சயமாக ஒரு சொல்லாவது இருக்கும்...அந்தளவு நண்பர்களை நேசிப்பவன் நான்.எந்தளவு என் நண்பர்களை நேசிக்கிறேனோ அதே அளவு என் கல்லூரியையும் நேசிக்கிறேன்..
குறிப்பாக என் உயர்தர வகுப்பு சக தோழர்களையும்,Ncage மக்களையும்,வெவ்வேறு கல்லூரிகளில் கற்றிருந்தாலும் "நட்பு"எனும் அழகிய சொல்லிற்கு கட்டுப்பட்டு இன்று கூட Mobile மூலமாக தொடரும் என் 1,2 நண்பிகளையும் சொல்லலாம்.
இந்த பதிவின் மூலம் என் கல்லூரி நாட்களின் சில அழகான தருணங்களை,நிமிடங்களை,நாட்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கிறேன்.
(படத்தில் போஸ் கொடுத்துக்கொண்டிருக்கும் நண்பன் SUJEEVAN.இவருக்கும் பின்னால் இருக்கும் தியேட்டருக்கும் ஒரு சம்பந்தம் இருக்கின்றது என்பதை எப்போதும் நம் மனதில் வைத்துக்கொள்ள எடுக்கப்பட்ட படம்)

நான் என் படிப்பை ஆரம்பித்தது பண்டாரவளை St.Thomas கல்லூரியில்...ஆனால் தரம் 4 வரை மாத்திரமே அங்கு படிக்க எனக்கு சந்தர்ப்பம் கிடைத்தது.அம்மாவின் இடம்மாற்றம் காரணமாக எனக்கு அங்கிருந்து விலகி ஹட்டன் வரவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது..இங்கு வந்து தரம் 5 இல் Highlands College இல் இணைந்தேன்.
அப்போதிலிருந்து என் உயர்தர பரீட்சைக்கு தோற்றும் வரை தொடர்ந்து அதே கல்லூரியில் தான் படித்தேன்.நான் இந்த கல்லூரியில் படித்த 9 வருடங்களில் எனக்கு கிடைத்த உறவுகள்,நடந்த சம்பவங்கள் போன்றவற்றையே இந்த பதிவில் எழுதப்போகிறேன்.

(படத்தில் இருப்பவர் ARUNJEEV.என் வகுப்பை தாண்டிய நண்பர் வட்டங்களில் மிக முக்கியமான ஒரு நபர்..இன்னும் மேலாக சொல்லப்போனால் கூடப்பிறவாத தம்பி எனக்கூட கூறலாம்)

*அது 2000ம் ஆண்டு,நான் கல்லூரியில் இணைந்து சில மாதங்களே கரைந்திருந்தன...அவ்வேளையில் பாடசாலையின் இல்ல விளையாட்டு போட்டி ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.அதில் 100m Relay ஓட்டப்போட்டியில் Reserve Runner ஆக தெரிவு செய்யப்பட்டிருந்தேன்.போட்டி ஆரம்பிக்க ஒரு சில நிமிடங்களே இருந்த வேளையில் எங்கள் அணியில் ஒருவரை காணவில்லை....சிறிது நேரம் தேடிப்பார்த்துவிட்டு என்னை ஓடுமாறு சொல்லி Track வரை போய்விட்டேன்...Mithoooooooooooooooonn.....நீளமாக என் பெயர் அழைக்கப்பட்டது....யார் என்று திரும்பிப்பார்த்த போது என் இல்லப்போறுப்பாசிரியை....காணாமல் போன பையனை தேடி கண்டு பிடித்து கொண்டு வந்து Track இல் விட்டு விட்டு என்னை திரும்பவும் Reserve Runner ஆகவே ஆக்கினர்.......
அன்றோடு விட்டது தான் தடகளப்போட்டிகளை......

(Highlands College-Hatton-Central,Srilanka-Building No-5-Primary Section)

*2001ம் ஆண்டு...நான் அந்த நேரம் தரம் 6இல் படித்துக்கொண்டிருந்தேன்...அன்றைய தினம் என் பிறந்தநாள்...வகுப்பாசிரியை வகுப்பிற்கு வந்ததும் விஷியத்தை சொல்வதற்காக எழுந்து நின்றேன்...அவ்வளவு தான்.அவர் என்ன நினைத்தாரோ என்னவோ தெரியவில்லை...கையில் வைத்திருந்த கொடிப்பிரம்பில் விட்டு விலாசித்தள்ளி விட்டார்.....என்னையும் இன்னொரு நண்பனொருவனையும் "முட்டிக்கால்"போட வைத்துவிட்டு ஏனைய மாணவர்களை கூட்டிக்கொண்டு வெளியே சென்று கற்பிக்க ஆரம்பித்து விட்டார்.....என் கண்களில் இருந்து வழிந்தோடியது கண்ணீர்.....அருகில் இருந்த ஒற்றை நண்பன் என்னை சமாதானப்படுத்தினான்....அவன் RAJEEV...1ம் பாடம் முடிவுக்கு வந்த பின் கூட்டிச்சென்ற மாணவர்களோடு வகுப்பறை வந்து சேர்ந்தார் ஆசிரியர்.....என்னையும்,நண்பனையும் இடத்திற்கு போகச்சொன்னார்...இடத்திற்கு சென்ற நான் வீட்டில் வாங்கிக் கொடுத்த இனிப்புப் பண்டங்களை தூக்கிக் கொண்டு ஆசிரியரிடம் சென்றேன்...அந்த நொடியில் தான் செய்த தவறெண்ணி வருந்தினார் ஆசிரியர்....என்ன தான் அவர் செய்த தவறு அந்த நொடியில் உணர்த்தப்பட்டாலும் பிறந்தநாளும் அதுவுமாக காலையிலேயே வாங்கிய அந்த அடியும்,தண்டனையும் என்றும் என் மனம் விட்டகலாது........

(Highlands College-Hatton-Central,Srilanka-Upper Section Main Entrance-New Building on Left,Office @ Center,IT Centre on Right)

*2002ம் ஆண்டு நினைவில் வைத்துக்கொள்ளும் அளவுக்கு பெரிதாக,சுவாரஸ்யமாக எதுவும் நடந்ததாக என் நினைவில் இல்லை....இருந்தாலும் அப்போதைய கால கட்டத்தில் எங்களுக்கு வகுப்பாசிரியராக வந்தவர் எங்களுக்கு கொடுத்த அடி மாத்திரம் மறந்தபாடில்லை....அந்த நேரத்தில் அவர் ஒரு கொடுமைக்காரராக எங்கள் பார்வைக்கு தென்பட்டாலும்,..இன்று என்னை எங்கு கண்டாலும் நலம் விசாரிக்கும் ஒரு நல்ல மனிதராக மாறாத எங்கள் பார்வைக்கு தெரிகிறார்.......

*நான் பாடசாலை கிரிக்கட் அணியில் இணைந்தது இவ்வருடம் தான்.

(New Building-Highlands College Hatton,(எங்கள் Commerce ராஜதானி)Srilanka)

* 2003ம் ஆண்டு முதல் முறையாக மாணவத்தலைவணாக தேர்ந்தெடுக்கப்பட்டேன்..
*எங்கள் அணி பல சாதனைகளை செய்த ஆண்டாக இது மாறியது.அதாவது 19 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது,வெறும் 10 ஓவர்களுக்கு மாத்திரம் முகம் கொடுத்து 127 ஓட்டங்களை பெற்றது.....என்று கிரிக்கட் இற்கு முக்கியத்துவம் அளிக்கும் ஆண்டாக இது மாற்றப்பட்டிருந்தது.....
*இன்னும் ஒரு சுவாரசியமான நிகழ்வு கூட நடந்தது...இறுதியாண்டு பரீட்சையில் சமூகக்கல்வி பாடத்தில் என் வகுப்பில் நான் உட்பட 14 பேர் 100 புள்ளிகளை பெற்றது.....

(Our Principal Mr.S.Wijaysingh @ His Office)

*2004 ம் ஆண்டு..ஒரு மாணவத்தலைவனாகவும் வகுப்பறையில் ஓர் மாணவனாகவும் காலம் கழித்த சாதாரண ஆண்டாகவே நகர்ந்தது...எனினும் கட்டை காற்சட்டை அணிந்து கல்லூரி சென்ற இறுதி ஆண்டு அது என்பதால் 2004 சற்று மெதுவாகவே நகர்ந்தது.......

(Main Hall-Highlands College (Upper Section) Hatton,Srilanka)
* 2005ம் ஆண்டு...முதல் முறையாக நீண்ட காற்சட்டை அணிந்து பாடசாலை சென்ற ஆண்டு....10ம் வகுப்பு பாடங்கள் சற்று சுமையாகவே இருந்தன...இருந்தாலும் ஒரு முறுக்கோடு வெற்றிகரமாக கற்று முடித்தோம்.....இவ்வாண்டில் தான் தமிழ் மீது அக்கறை கொண்டேன்...தமிழுக்கென்று தனியான பிரத்தியேக வகுப்புகளுக்கு சென்றேன்...தமிழ் மீது அக்கறை கொண்டதாலோ என்னவோ தமிழ் ஒரு இலகுவானதொரு பாடமாக மாறிய அற்புத ஆண்டு....சிறு சிறு சண்டைகள் வந்து வந்து மாயமாய் மறைந்து கொண்டிருந்த நேரம்.....அடுத்த வருடம் வரப்போகும் O/L பரீட்சையை நினைத்து அநேகரின் முகத்தில் ஒரு வித தவிப்பு,பயம்,எதிர்பார்ப்பு........ஹீ ஹீ.........அப்டியெல்லாம் ஒன்றும் இருக்கவேயில்லை.....காரணம் எங்கள் மீதும்,ஆசிரியர்கள் மீதும்,குறிப்பாக கல்லூரி மீதும் வைத்திருந்த நம்பிக்கை......வேகமாக கரை புரண்டோடியது 2005....

(Laboratory Complex-Highlands College-Hatton,Central,Srilanka)

*2006...எங்கள் பல பேரின் வாழ்க்கையை தீர்மானிக்கப்போகும் ஆண்டு.....சின்சியரான படிப்பில் பாதி ஆண்டு ஓடி விட்டது....அன்று திகதி June 30....பாடசாலையின் பரிசளிப்பு விழா முதல் நாள் தான் நடந்து முடிந்திருந்தது.....விழாவை நடத்தி முடித்த களைப்பினால் பெரும்பாலான ஆசிரியர்கள் அன்று பாடம் நடத்த வில்லை.....கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டு மெதுவாக மேசையில் தாளம் தட்டி பாடல் பாட ஆரம்பித்தோம்.....நேரம் செல்ல செல்ல சத்தம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாகி அது Baila வாக மாறியது....கொஞ்ச நேரத்தில் வகுப்பின் யன்னலிநூடாக யாரோ பார்ப்பது போல தெரிய....எட்டிப்பார்த்தால்.....அதிபர்.......................அடி.....அடி...அடி....
அதிலும் குறிப்பாக Kaushigan எனும் நண்பனுக்கு "நீ டொக்,டொக்,டொக்டர் மகன் தானே"என்று சொல்லி சொல்லி அடி விழுந்தது......அவர் டொக் என்று ஒவ்வொரு முறை சொல்லும் போதும் ஒரு அடி விழுந்தது.......அதிபர் பார்த்துக்கொண்டிருக்கும் போது பாடிய பாடல்-"கிழிஞ்ச பாயில் கவுந்து படுக்கும் போது உன் கனவுல கிளியோபட்ரா வந்தா லவ் இல்ல,ஜவுளி கட பொம்மைய பாக்கும் போது உன் புத்திகுள்ள கவுளி கத்தும் அதுவும் லவ்விள்ள"பாடலை அந்த நேரத்தில் பாடிக்கொண்டிருந்தது VIGNESH.நீங்களே சொல்லுங்க அவர் அடிக்காம என்ன தான் பண்ணுவாரு??????
*2006 இல் நடந்த இன்னுமொரு முக்கியமான நிகழ்ச்சி....எங்கள் நாடகம்....அதைப்பற்றி தான் ஏற்கனவே ஒரு பதிவே எழுதினேனே.....அதை வாசிக்கத் தவறியவர்கள்.....இங்கே "கிளிக்"கவும்...
*தொடர்ந்து வந்தது G.C.E O/L.....இறைவன் அருளுடன் அதையும் கூட வெற்றிகரமாக முடிக்கக் கூடியதாக இருந்தது....


(அருள்மிகு ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயம்....Highlands College,Hatton)
G.C.E O/L பரீட்சைக்கு பின் A/L இல் இணைவதற்காக 2007 ஆகஸ்ட் மாதம் தான்....முதல் முதலாக பாடசாலைக்கு சென்றோம்....புது நண்பர்கள்,புதிய பாடம்,என எல்லாமே புதுசாக இருக்க சிலபழைய நண்பர்களை இழந்த கவலையோடும் ஆரம்பித்தோம் எங்கள் உயர்தரத்தை....
"புதிய"எனும் சொல் தந்த உற்சாகத்தால் 2007 இல் மிகுதியிருந்த மாதங்களும் எவ்வித பிரச்சனைகளும் இல்லாமல் நகர எங்களை வரவேற்றது 2008......

(Ramzan,Kisho.Vinodhan,Roshanthini,Rifaya,Saranya,Niroshana)
2008 மிக ஆரம்பத்திலேயே அதிபருக்கும்,எங்கள் வணிகப்பிரிவு ஆசிரியருக்கும் பிரச்சனையோடு ஆரம்பித்தது.....நாளடைவில் அந்த பிரச்சனை பெரிதாகி வணிகப்பிரிவு 2 குழுக்களாக மாறின....
1.குறிப்பிட்ட ஆசிரியரிடம் வகுப்பிற்கு செல்லும் மாணவர்கள்.
2.அதிபர் ஒழுங்குபடுத்தி கொடுத்த ஆசிரியரிடம் வகுப்பிற்கு செல்லும் மாணவர்கள்....
நான் இரண்டாவது குழுவில்.....இதனிடையே பல்வேறு ஊடல்கள் மாணவர்கள் மத்தியில் "ஏற்படுத்தப்பட்டன"....
பதின்ம பருவம் யோசிக்கத்தவறியது......சாதகங்களும் பாதகங்களும் இரு குழுக்களின் இடையேயும் சிதறிக்கிடந்தது.....
அந்த வருடம் முழுவதும் இதே போல் தான் கரைந்து சென்றது.....

(Ratheesh,Thiliban,Kisho,Sugeevan)

2009ம் ஆண்டின் ஆரம்பப்பகுதி கடந்த ஆண்டை போலவே நகர்ந்தது..எனினும் சுதாரித்துக்கொண்ட நாங்கள் இருப்பது இன்னும் வெறும் 7 மாதம் தான் எனும் உண்மை புரிந்து பிணக்குகளில் இருந்து மீண்டு ஒருவருக்கொருவர் நல்ல முறையில் பழக ஆரம்பித்து விட்டோம்...
காலம் சுழன்றது...வந்து சேர்ந்தது March 2009..அது Bigmatch Season...11வது மலைகளுக்கு இடையிலான மோதல் (Battle of the hills)ஒழுங்கு செய்யப்பட்டது ..அவ்வருடத்தின் ஹைலண்ட்ஸ் கல்லூரியின் அணித்தலைவராக நான் தெரிவு செய்யப்பட்டேன்....
போட்டி நடைபெற்றது...2ம் நாள் முடிவின் போது எதிரணி 49 ஓட்டங்களுக்கு 6 ஓட்டங்களை இழந்திருந்த வேளையில் போட்டி வெற்றி தோல்வி இன்றிய நிலையில் முடிவிற்கு வந்தது.....
அதன் பிறகு படிப்பிற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டோம்....அதன்படியே முக்கியத்துவம் அளித்தோம்...
உயர்தர பரீட்சை நடைப்பெற்றது கடவுள் புண்ணியத்தில் அதிலும் வெற்றி கண்டோம்.....
இறுதி நாள் பாடசாலையை விட்டு வெளியேறிய அந்த நொடிப்பொழுது இன்றும் என் மனதில் ஓர் ஓரத்தில் ஒட்டிக்கொண்டிருக்கிறது.
அந்த உணர்வை மறப்பது என்பது மரணப்பொழுதிலும் முடியாத ஒன்று...
மீண்டும் பள்ளிக்காலம் என்பது ஒருபோதும் நிறைவேறாத ஒன்று...

அந்த பள்ளிக்காலம் தந்த இன்பமான சில நினைவுகளுடனும்,பல புகைப்படங்களுடனும் வாழ்ந்து கொண்டிருக்கும் இவன்-Mithoon.J

(11 th Battle Of The Hills 2009.Hghlands vs Sripadha @ Dmcc)

Monday, December 13, 2010

என் கேமராவும் நானும்.......

ஒரு சில நாட்களுக்கு முன் என் "ரயில் பயணம்"பதிப்பில் ஒரு விடயத்தை கூறியிருந்தேன்.
"ங்கள் நண்பர் குழு வட்டத்தை தெரிந்தோ தெரியாமலோ ஒரு நல்ல பழக்கம் பற்றிக்கொண்டிருந்தது.வேறொன்றுமில்லை போகும் இடமெல்லாம் புகைப்படங்களை click இட்டு விடுவதுதான்" என்பது தான் அது.
சாதாரணமாக ஆரம்பித்த அந்த நல்ல பழக்கம் இன்று மிகப்பெரிய விருட்சமாக வளர்ந்து நிற்கிறது...அவ்வாறு "கிளிக்"கிட்ட படங்களில் எனக்கு பிடித்த படங்களை இந்த தளத்தின் மூலம் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

Location தேடி சென்ற பொது ஹட்டனை அண்மித்த பிரதேசம் ஒன்றில் என் கண்களிலும் என் கேமரா வின் கண்களிலும் பட்ட பாதியாக வளைந்து நின்ற மரம்.

நாங்கள் சென்ற உயரமான இடத்தில் இருந்து தொலைவில் தெரிந்த மலைத்தொடர்களை ரசித்து கவிதை புனைய முயன்ற நண்பன் "அருண்"

தனது அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பதை கருங்கற்களில் அமர்ந்த படியே சிந்தித்துக்கொண்டிருக்கும் அனுபவம் மிக்க ஒரு பெரியவர்

கேமராவின் இந்த ஆங்கிளுக்கு கஷ்டப்பட்டு போஸ் கொடுக்கும் என் இனிய நண்பர்கள்

மழைக்கு இருட்டிய ஒரு மலை வேளையில் தென்றலின் மெல்லிய வருடலினால் அசையாமல் அசைந்து கொண்டிருக்கும் ஒரே வகையை சேர்ந்த மூன்று மரங்கள்

வேகாத வெயிலிலும் மலை பிரதேசங்களை சூழ்ந்துள்ள பஞ்சு போன்ற மேகக்கூட்டங்கள்

ஒரு சாதாரண பள்ளத்தாக்கில் தனித்து வளர்ந்து நிற்கும் துணியில்லாத இயற்கையின் கு(கொ)டை

இரண்டு சிறிய தேயிலைகளுக்கு மத்தியில் ஒரு பெரிய கட்டிடத்தை உள்ளடக்க எடுக்கப்பட்ட முயற்சி

வளர்ந்து ஓங்கி நிற்கும் மலைகளை கூட மிகச்சாதாரணமாக தன் படைகளின் உதவியுடன் சுற்றி வளைத்துள்ள பனிக்கூட்டம்

ஒரு காலத்தில் அழகாக இருந்து சக்கை போடு போட்டுக்கொண்டிருந்த இந்த மரத்தின் இன்றைய நிலை!!!!!!

மருந்துகள் தெளிக்கப்பட்ட தேயிலை செடிகளுக்கு இடையிடையே அழகாக வளர்ந்து நிற்கும் மரங்கள்

இதை பற்றி என்ன சொல்வதென்று சத்தியமாக தெரியவில்லை.

கருங்கற் பாறைகளை கூட பிளந்து வரும் நீரின் உத்வேகம்

இலங்கையில் மிகவும் பிரசித்தி பெற்ற பல திரைப்படங்களில் கூட தன அழகை காட்டியுள்ள St.Clair நீர் வீழ்ச்சி

இயற்கை அழகை தன்னகத்தே கொண்ட கண்களுக்கு விருந்து படைக்கும் Devon நீர் வீழ்ச்சி....

இன்னும் ஆயிரக்கணக்கில் கிளிக்கிட்ட படங்கள் உள்ளன....ஒவ்வொரு பதிவாக கொஞ்சம் கொஞ்சமாக அவற்றை உங்கள் மத்தியில் பகிர்ந்து கொள்ள ஆசை படுகிறேன்.....

மீண்டும் ஒரு பதிவில் சந்திப்போம்-இவன்-Mithoon.J




Saturday, December 11, 2010

எயிட் பிலோ-Eight Below (2006)

பதிவில் உள்ள படங்களை வைத்து WALT DISNEY யின் இன்னுமொரு நாய்களை பற்றிய படம் என்று எண்ணியவரா நீங்கள்??அப்படியென்றால் நிச்சயமாக உங்கள் கணிப்பு 100% தவறானது....உண்மைச் சம்பவங்களை எடுத்துக்காட்டாக கொண்டு
தயாரிக்கப்பட்டு அமெரிக்காவின் முதல் தர பட வகைகளுக்குள் உள்ளடக்கப்பட்ட இரண்டு,நான்கு கால் கொண்ட நடிகர்களால் தத்ரூபமாக நடிக்கப்பட்டு DISNEY நிறுவன பேனரில் வெளிவந்த திரைப்படமே இதுவாகும்....
இயக்குனர் FRANK MARSHALL இனால் இயக்கப்பட்ட இப்படம் அனைத்து தரப்பினரும் ரசிக்கக் கூடிய வகையில் இருந்தமையால் BOX OFFICE இன் GOLD விருதினை பெற்றுக்கொண்டது.
இத்திரைப்படம் 1957ம் ஆண்டு நடந்த உண்மைச்சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட 1983ல் வெளிவந்த JAPANESE EXPEDITION எனும் திரைப்படத்தை மையமாக கொண்டதாகும்.
இப்போது கதைக்கு வருவோம்........
கதையின் நாயகன் Jerry Sheperd பண்பு,ஒழுக்கம் மிக்க ஒரு Guide ஆகும்.தன் பணியின் நிமித்தம் இவர் தான் வளர்க்கும் 8 பனி நாய்களுடன் (SLED DOGS) அன்டார்டிகா வில் வாழ்ந்து வருகிறார்.


சரியாக பனி அதிகமாக போழியக்கூடிய காலத்திற்கு (WINTER) ஓரிரு தினங்களே மீதமிருக்கும் நேரத்தில் Jerry இற்கு DR.DAVIS உடன் ஒரு கல்லை தேடி செல்ல வேண்டிய பொறுப்பை ஒப்படைக்கிறது NSA அமைப்பு...
கல்லை தேடி அந்த இடத்திற்கு வாகனங்களில் செல்ல முடியாததால் தான் வளர்க்கும் 8 நாய்களுடன் DR.DAVIS உடன் அந்த குறிப்பிட்ட இடத்திற்கு செல்கின்றான் Jerry.அவர்கள் அந்த இடத்திற்கு சென்று அடைந்ததுமே தலைமையகத்தில் இருந்து பெரும் புயல் ஒன்று அன்டார்டிகா வை தாக்கக் கூடிய நிலை ஏற்பட்டிருப்பதாகவும் உடனடியாக அங்கிருந்து தலைமையகத்திற்கு வந்து விடுமாறும் Base இற்கு தகவல் வழங்கப்படுகிறது....Base இல் இருந்து Jerry க்கு தகவல் வழங்கப்பட Dr.Davis உடன் அந்த இடத்தை விட்டு நீங்க தயாரானான் Jerry..
எனினும் Dr.Davis அதனை மறுத்து தனக்கு மேலும் ஒரு சில மணி நேரங்கள் அவகாசம் வழங்குமாறு கேட்க,விருப்பமில்லாமல் ஒத்துக்கொண்டான் Jerry..

Jerry வழங்கிய அவகாசத்திற்குள் தேடி வந்த கல் கிடைத்துவிட வேலை சுலபமாக முடிந்துவிட்ட சந்தோஷத்தில் Base நோக்கி கிளம்பினர்..பாதி வழியில் பனி உறைந்து இருக்கும் ஒரு பகுதியில் Dr.Davis காலை வைக்க பனியை உடைத்துக்கொண்டு நீரில் விழுகிறார் Dr.

ஒரு வழியாக Jerry யின் நாய்கள் அவரை காப்பற்ற கால் உடைந்த நிலையில் டாக்டரும் ஜெர்ரியும் Base இற்கு வந்தடைகின்றனர்...
Base இற்கு வந்ததுமே நாய்களை தவிர ஏனையோர் அனைவரும் தலைமையகத்திற்கு செல்ல ஆயத்தமாக,நாய்களை கவனத்திற்கொண்டு Jerry வர மறுக்கிறான்.

ஒருவாறு அவனை சமாதானப்படுத்தி தலைமையகத்திற்கு அழைத்து செல்கின்றனர் குழுவினர்......அதன் பின் நாய்களுக்கு என்ன நடந்தது?அவை புயலில் இருந்து காப்பற்றப்பட்டனவா??நாய்களை பிரிந்து Jerry படும் துயரம்,நாய்களை மீட்க Jerry செய்த ஏற்பாடுகள் என்பனவே படத்தின் மிகுதிக்கதை.....
இந்த படத்தை பொறுத்தவரையில் நாய்கலின் நடிப்பு அபாரம்..மனிதர்களின் நடிப்பை விட 8 நாய்களின் நடிப்பு ரசிக்கக்கூடிய வகையில் இருந்தது.

ACTION தவிர ஏனைய அனைத்தும் இப்படத்தில் உண்டு...மெல்லிய காதல்,நகைச்சுவை,செண்டிமெண்ட் என அனைத்தும்.......இது போன்ற படங்கள் வெளிவருவது மிக அரிதான ஓர் காரியமாக மாறிவிட்டது இந்த கால கட்டங்களில்...
இந்த படத்தை Torrent இல் தரவிறக்கம் செய்ய இங்கே click கவும்
படக்குழுவினர் விபரம் வருமாறு

Paul Walker ... Jerry Shepard
Bruce Greenwood ... Davis McClaren
Moon Bloodgood ... Katie
Wendy Crewson ... Eve McClaren
Gerard Plunkett ... Dr. Andy Harrison
August Schellenberg ... Mindo
Jason Biggs ... Charlie Cooper
D.J. ... Max -a Dog
Timba ... Max - a Dog
Koda ... Maya - a Dog (as Koda Bear)
Jasmin ... Maya - a Dog
Apache ... Old Jack - a Dog
Buck ... Old Jack - a Dog
Noble ... Shadow - a Dog
Troika ... Shadow - a Dog


இந்த படத்தின் ட்ரைலர் வருமாறு




இது போன்ற ஒரு படத்தை பற்றி உங்கள் மத்தியில் பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி...

மீண்டும் ஒரு இனிய பதிவின் மூலம் சந்திப்போம் -இவன்-Mithoon.

Wednesday, December 8, 2010

இரண்டு சொட்டுக் கண்ணீர்


நேற்று மாலை வேளையில் ஒரு வேலை விஷயமாக கிராம உத்தியோகத்தரின் சான்றிதழை தேடிக்கொண்டிருந்தேன்.பழைய File கலையெல்லாம் உருட்டிக்கொண்டிருந்த பொது "சுயம்"என தலைப்பிடப்பட்ட ஒரு பத்திரிகை கண்ணில் பட்டது...அது 2001 ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் வெளிவந்ததாகும்.வாசிக்கலாம் என மனம் சொல்ல அதை தனியாக எடுத்து வைத்து விட்டு எனது தேடலில் மீண்டும் மூழ்கினேன்......

இரவு ஒரு 7.20 இருக்கும் என் வீட்டு தொலைக்காட்சியில் "மகராணி"தொடரில் "ராணி"யின் பழிவாங்கும் படலம் "தொடர்ந்து தொடர்ந்துக்கொண்டே"இருந்தது......
அதை பார்க்க விருப்பமில்லை,,,அங்கிருந்து விலகி என் அறை நோக்கி வந்தேன்..வரும் வழியில் கண்ணில் பட்டது எடுத்து வைத்த "சுயம்"

"சுயத்தை"வாசித்த பொது அதில் அதிகமாக அந்த கால கட்டத்தில் குறிப்பிட்ட பாடசாலை ஒன்றில் நிகழ்ந்த குறிப்பிட்ட சம்பவம் ஒன்று தொடர்பாக அதிகமாக எழுதப்பட்டிருந்தது....

அதன் கடைசி பக்கத்தில் "இரண்டு சொட்டுக் கண்ணீர்"எனும் தலைப்பில் ஓர் சிறுகதையும் பிரசுரிக்கப்பட்டிருந்தது.அதை வாசித்ததும் உங்களுடன் அதனை பகிர்ந்து கொள்ள வேண்டும் என என்னுள் தோன்றவே இதோ இந்த "POST"உங்களுக்காக.......

"கெம்பஸ் கெடச்சிடும்...கெம்பஸ் கெடச்சிடும்...க.பொ.த.உயர்தரத்தில் வர்த்தகப்பிரிவில் பயின்று இரண்டு A,இரண்டு B என பெறுபேறு வந்த பூரிப்பில் ஆர்ப்பரிக்கின்றேன்.

கட்டிப்பிடித்து முத்தமிட்டு என் சந்தோஷத்தில் இறக்கை கட்டி மேகங்களுக்கிடையில் பறக்கும் தம்பி.
"கெம்பஸ் என்றால் என்ன?"-அடுப்போடு கூடிய திண்ணையில் அமர்ந்து சுவரில் சாய்ந்தபடி அப்பாவியாய் கேட்கும் அம்மா.
அவள் காலடியில் அமர்ந்து மடியில் முகம் புதைத்து சொல்கிறேன்,
"கெம்பஸ் என்றால் பல்கலைக்கழகம்.பல்கலைக்கழகம் என்றால் பட்டப்படிப்பு படிக்கும் இடம்.பட்டப்படிப்பு படிச்சா பெரிய வேலை கிடைக்கும்."
என் கண்களில் ஆனந்தக்கண்ணீர்,அம்மாவின் கண்களிலோ கலவரம்.......

"இன்னும் எம்புட்டுக் காலம் படிக்கணும்?"-அம்மா விசனத்தோடு வினவுகிறாள்
"மூணு வருஷம்,B.COM முடிச்சு வந்தால் Bank ல வேலை கிடைக்கும்;காலம் வரும் ,நம் கஷ்டங்கள் எல்லாம் கலைந்து விடும்.நீ பட்ட துயரங்கள் போதும் தாயே.நீ மலைக்கு போக வேண்டாம்.உன்னை நான் காப்பாற்றுவேன்."

"சரி உன் படிப்புக்கு பெரிய செலவாகுமே!"-அம்மா அங்கலாய்க்கிறாள்.
"யாருகிட்டயாவது கேட்கலாம்.நமக்கின்னு நாலு பேர் இல்லாமலா போயிடுவாங்க?"என்று நம்பிக்கையோடு சொல்ல "சரி எங்க வயித்துக்கு.....எங்க வயித்துக்கு யார் கிட்ட கேட்கிறது?".என்ற அம்மாவின் கேள்வியில் பொட்டிலடித்தாட் போல் நிமிர்கிறேன்.அம்மா தொடர்ந்தால்.

"ஆமா தாயி.இந்த வருஷத்தோட பென்ஷன் எழுதிரலாம் னு நெனக்கிறேன்.என்னால் வர வர மலைக்கு போக முடியல.கை,கால் எல்லாம் நடுங்குது.ஒனக்கு ஒரு வேல கெடச்சிட்டா வீட்ல இருக்கலாம்னு யோசிச்சேன்.நீ இன்னும் மூணு வருஷம் படிகனுங்கிறியே!"

தம்பி மேகங்களுக்கிடையில் பறந்தவன் பூமியில் வீழ்கிறான்."என்னம்மா...மலைநாட்லயிருந்து எத்தனைப்பேர் பல்கலைக்கழகம் போறாங்க..அதுவும் தொழிலாளிங்க புள்ளைக....அக்கா ஒரு சாதனை செஞ்சிருக்கா!எத்தனை சந்தோஷமான விஷியம்.நீ என்னடான்னா கவலைப்படுறியே."
நீயும் அக்கா மாதிரி படிக்கணும்னு தாண்டா எனக்கும் ஆச,ஆனா நமக்கும் வயிருன்னு ஒன்னு இருக்குதே!பசிக்குமே!"

"அக்கா,நான் பிரைவேட்டா ஓ,எல் எழுதறேன்.அடுத்த மாசம் புதுசா பொடியன்கள பதியிறாங்கலாம்.நான் பேர் பதிஞ்சிக்கிறேன்.நீ கெம்பசுக்கு போ"-என்றான் பத்தாம் வகுப்புத் தம்பி பாலு.

"லொக்...லொக்...லொக்..-மூவரும் திடுக்கிட்டுத் திரும்புகிறோம்.உள்வீட்டுக் கட்டிலில் படுத்தபடியே இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த பக்க வாதத்து அப்பா தென்னவன் இருமுகிறார்.

மூவரும் ஓடி கைத்தாங்கலாகத் தூக்கி தலையணையை சுவருக்கு முட்டு வைத்து அப்பாவை உட்கார வைக்கிறோம்.நான் மார்பைத் தடவ,தம்பி சலியை துப்ப சிரட்டையை கொடுக்கிறான்.
அப்பா இருமிக் கொண்டே சொல்கிறார்."நீங்க பேசினதை எல்லாம் நான் கேட்டுக்கிட்டு தாம்மா இருந்தேன்.நீ கட்டாயம் படிக்கப் போ.நான் இன்னும் ரெண்டு மாசத்துல செத்துருவேன்...அதுக்கப்புறம் சங்கத்துல கொஞ்சம் காசு கொடுப்பாங்க,நண்பர்களும் பணம் சேர்த்து கொடுப்பாங்க.அத வச்சு நீ பொழச்சுக்க."

வார்த்தைகளின் சோகம் உள்ளத்தை தாக்கி கண்ணீரை வரவழைக்க ஸ்தோப்பிற்கு வருகிறேன்.
-மலையேறி தளிர் பறித்து படிக்க வைத்த அம்மா.
-தன் படிப்பை பணயம் வைத்து படிக்கச்சொள்ளும் தம்பி
-செத்த பிறகு வரும் சங்கப் பணத்தில் என் வாழ்க்கைக்கு ஒளி ஏற்றத் துடிக்கும் அப்பா.....

ஒரு முடிவிற்கு வருகிறேன்.பல்கலைக்கழகம் போவது இல்லை.மாறாக படித்த மலையக இளைஞர்-யுவதிகள் அடைக்கலம் புகும் ஆசிரியர் தொழிலுக்கு விண்ணப்பிக்க போகிறேன்.
என்றாலும் திடீரென்று ஒரு பயம் மனசை ஆட்கொள்கிறது.இன்று ஆசிரிய தொழிலுக்கு சமுதாயத்தில் என்ன மதிப்பு இருக்கிறது? கொஞ்ச நஞ்சம் இருந்த மதிப்பும் மரியாதையும் தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயத்தில் நடந்த சம்பவங்களால் அடியோடு இல்லாமல் பொய் விட்டதே!இந்த நிலையில் ஆசிரியத் தொழிலை தேர்ந்தெடுப்பது சரி தானா?

இப்படி யோசித்தாலும் என் ஆழ்மனதின் அலாரம் வேறு விதமாக அடித்தது.நான் ஏன் சமுதாயத்திட்கு பயப்பட வேண்டும்?ஆசிரியர் எல்லோரும் பொல்லாதவர்கள் அல்லவே.உண்மையான ஆர்வத்தோடும்,உயர்ந்த மனப்பான்மையோடும்,உள்ள உறுதியோடும் மலையக மாணவர்களின் வளர்ச்சிக்கு உழைக்கும் ஆசிரியர்கள் தான் எத்தனை எத்தனை!
நான் ஏன் அவர்களை உதாரணங்களாய் கொள்ளக்கூடாது?

ஆசிரியப் பணியின் தாற்பரியத்தை,அதன் புனிதத்தை,மகத்துவத்தை புரியாத சிலர் ஆசிரியர் என்னும் போர்வையில் செய்யும் மிலேச்சத்தனமான செயல்களால் நான் ஏன் முழு ஆசிரிய சமூகத்தையும் சபிக்க வேண்டும்?
ஆசிரியத் தொழிலுக்கே விண்ணப்பிபோம்:என்னை போன்ற ஏழை மாணவர்களின் வாழ்வில் ஒளி ஏற்றுவோம் என்று என் எண்ணங்கள் உயிர் பெறுகையில் என் கன்னங்களில் இரண்டு சொட்டு கண்ணீர் துளிகள்.
ஒன்று:-பல்கலைக்கழகம் செல்ல முடியவில்லையே என்ற ஏக்கத்தினால்.
இன்னொன்று:-இந்த லயத்து ஜீவன்களின் பாசப்பினைப்புகளினால் ஏற்பட்ட தாக்கத்தினால்.
-டேசி மலர்-நோர்வூட்.

Wednesday, November 24, 2010

Kingdom Of கிழிஞ்சபுறம்

அது 2006ம் ஆண்டு விஜயதசமி நேரம் சரியாக சரஸ்வதி பூஜை தொடங்கி 4வது நாள் இருக்கும்.பாடசாலையில் விஜயதசமி நாள் நிகழ்வுகளுக்காக நிகழ்ச்சிகள் சேகரிக்கப்பட்டுக் கொண்டிருந்தன...அப்போது நாங்கள் G.C.E O/L பரீட்சைக்காக தயாராகிக்கொண்டிருந்தோம்.
அன்று இரவு நாங்கள் ஆங்கில வகுப்பில் இது சம்பந்தமாக கலந்துரையாட வேண்டிய நிலை ஏற்பட்டது..அப்போது எங்கள் ஆசிரியை எங்களையும் ஏதாவது ஒரு நிகழ்ச்சியை வழங்குமாறு ஆலோசனை வழங்கினார்...என்ன செய்யலாம் என நீண்ட நேர கலந்துரையாடலுக்கு பிறகு வழக்கம் போல "கல்வியா செல்வமா வீரமா"எனும் தலைப்பில் ஒரு நாடகத்தை அரங்கேற்றிவிடலாம் என நண்பன் ஒருவன் Idea தர அதே நினைவோடு வீடு நோக்கி சென்றோம் நாங்கள்.

மறுநாள் நிகழ்ச்சிப்பொறுப்பாசிரியரிடம் சென்று இந்த விஷியத்தை சொன்னதும் அவர் அதிபரிடம் போய் அனுமதி பெற்று வருமாறு அனுப்பிவிட்டார்..தொடர்ந்து அதிபரிடம் அனுமதி வாங்கும் படலத்திற்காக நாங்கள் நண்பர்கள் சில பேர் அதிபரின் அலுவலகம் சென்று அதிபரிடம் அனுமதி வழங்குமாறு கேட்டோம்..அதற்கு அவர் நாடகத்தின் கதையை கேட்டார்..அதிபரிடம் கதையின் தலைப்பை சொன்னதுமே அவர் எங்களை நிறுத்தச்சொல்லிவிட்டு அவரே கதையை சொல்லி முடித்தார்..!!(இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை.காரணம் நாங்கள் கொண்டு சென்ற கதை வழக்கமாக எல்லா விஜய தசமி மேடைகளிலும் அரங்கேறுவது தானே???)கதையை சொல்லி முடித்ததும் அவரே தொடர்ந்தார்...."வேறு ஏதும் புதுசா நல்ல கதையா கொண்டு வாங்க இது சரி வராது"

சினிமா தயாரிப்பாளரிடம் சான்ஸ் கேட்டுச்சென்ற இயக்குனரின் நிலை போல் ஆகி விட்டது எங்கள் நிலையும்...அன்று படிப்பை துறந்து கதை கலந்துரையாடலுக்காக நேரத்தை செலவிட்டோம்...நீண்ட நேர செலவளிப்புக்கு பின் சிக்கியது ஒரு கதை...கதை என்றால் அது கதை அல்ல ஒரு கதைக்கான கரு....

அதாவது இம்சை அரசன் 23ம் புலிகேசி திரைப்படம் வெளிவர தயாராக இருந்த சமயம் தான் அது...அதனை நினைவில் கொண்டு ஒரு நண்பன் "ஒரு அரச சபைய மையமா வச்சு கதையை கொண்டுபோனா என்ன?"என்றான்....idea நன்றாக இருக்க எல்லோரும் சம்மதித்தனர்...அந்த நொடியில் இருந்து நாடகம் கொஞ்சம் கொஞ்சமாக மெருகேற ஆரம்பித்தது...கதைக்கு Script என்று தனியாக எதுவும் இல்லை...அப்போதைய சந்தர்ப்பங்களுக்கு ஏற்ற வாறு வாயில் வருவதை சொல்லி சொல்லி கதையை ஓரளவு கட்டி எழுப்பி விட்டோம்.அந்த நேரத்தில் சொல்லப்பட்ட சொற்கள் குறித்து வைக்கப்பட்டு அவையே வசனங்களாக மாறின...3 நாட்கள் தொடர்ந்து கஷ்டப்பட்டு ஒருவாறு நாடகத்தை முழுவதுமாக தயார்படுத்தி விட்டோம்.

எல்லாம் சரியாக இருந்தும் ஏதோ ஒன்று மட்டும் குறையாக இருந்தது...அது வேறொன்றும் இல்லை பின்னணி இசை தான்.Yamaha Keyboard இன் உதவியுடன் கொஞ்சம் கொஞ்சமாக பின்னணி இசையும் உருவானது....குறிப்பாக சொல்லப்போனால் மன்னனுக்காக உருவாக்கப்பட்ட பின்னணி இசை மன்னனின் நடைக்கு கனகச்சிதமாக பொருந்தியது...நாடகத்திற்கான பின்னணி இசையும் தயாரித்தாகி விட்டது.இனி மீதமாக இருந்தது அதிபரின் அனுமதி தான்..
அதிபரிடம் சென்று கதையை சொன்னோம்...அவர் அனுமதியை அளித்து விட்டு "எதுக்கும் சசி மிஸ் கிட்ட ஒரு தடவ நடிச்சு காட்டிருங்க"என்றார்...

விஜய தசமி தினத்திற்கு முதல் நாள் மாலை 4 மணியளவில் பாடசாலைக்கு சென்று சசி மிஸ் முன்னிலையில் நாடகத்தை நடித்துக்காட்டினோம்...நாடகம் அவருக்கு பிடித்துப்போக "நான் தான் உங்களிண்ட Teacher In-Charge OK வா"என்றார்...இது எங்கள் நாடகத்திற்கு கிடைத்த அங்கீகாரம்....சந்தோஷமாக "சரி"என்று சொல்லி வீடு நோக்கி கலைந்து சென்றோம்.
மறுநாள் காலை பாடசாலைக்கு சென்றதும் தனியான இடத்தில் வைத்து ஒரு முறை நாடகத்தை நடித்துப்பார்த்தகிவிட்டது.எல்லோரும் தயார் நிலையில் இருக்க விஜய தசமி விழா நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றாக மேடையில் அரங்கேறிக்கொண்டிருந்தன எங்களது நாடகம் தான் இறுதி நிகழ்வு...நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் "இப்போது நிகழ்ச்சியின் இறுதி நிகழ்வாக தரம் 11 மாணவர்கள் வழங்கும் Kingdom Of கிழிஞ்சபுறம் நகைச்சுவை நாடகம் இடம்பெறும்...தொடர்ந்து நன்றியுரையுடன் நிகழ்வு இனிதே நிறைவுறும்"என்றார்.
எமது நாடகம் மேடையேற்றப்பட்டது.

நகைச்சுவை நாடகம் என்பதால் மாணவர்கள் மத்தியில் மட்டுமில்லாமல் ஆசிரியர்கள்,சிறப்பு விருந்தினர்கள் மத்தியிலும் வரவேற்பு பலமாகவே இருந்தது...நாடகத்தின் ஒவ்வொரு கதா பாத்திரங்களின் அறிமுகத்தின் போதும் கைத்தட்டல்கள் அதிக அதிகமாக கிடைத்தன.நாடகம் முடிவடைந்த பின் அனைத்து ஆசிரியர்களும் (அதிபர் உட்பட) எம்மை பாராட்டினர்...அந்த 3 நாட்கள் நாம் பட்ட கஷ்டத்திற்கு பரிசாக சக மாணவர்களினதும் ஆசிரியர்களினதும் கரகொஷங்கள் கிடைத்தன.
அப்படி என்னதான் கதை என்று யோசிக்கின்றீர்களா?
முதலில் ஒரு அரச சபையை காட்டுகின்றோம்.அந்த அரச சபையில் ஒரு சிம்மாசனம்,வலது பக்கம் 4 ஆசனங்கள்,இடது பக்கம் 4 ஆசனங்கள் இந்த 8 ஆசனங்களில் ஒரு ஆசனத்தில் மட்டும் அமைச்சர் ஒருவர் தூங்கிக்கொண்டு இருக்கிறார்.சிறிது நேரத்தில் ஒவ்வொரு அமைச்சர்களாக வந்து தத்தமது ஆசனங்களில் அமர்ந்து கொள்கின்றனர்...அமைச்சர்களின் வருகைக்கு பின் கடைசியாக அரசன் அரச சபைக்கு வருகின்றார்...அரசன் தன் அரியாசனையில் அமரும் முன்பே அரச சபை பிரதான காவலன் பதற்றத்துடன் ஓடி வருகின்றான்.பதற்றம் மாறாமல் 2 புலவர்கள் ஒன்றாக சபை நோக்கி வருவதை கூறிவிட்டு அந்த இடத்தை விட்டு செல்கிறான்.புலவர்கள் வருவதை அறிந்த மன்னன் சுதாரித்துக் கொண்டு ஆசனத்தில் அமர்கின்றான்.
புலவர்கள் இருவரும் சபைக்கு வந்து மன்னனுக்கு மரியாதையளித்து நாட்டு நடப்புகளை பற்றி பாடலாக பாடிவிட்டு செல்கின்றனர்...அவர்கள் பாடலாக பாடியது மன்னனுக்கு சாதகமாக இருக்கவில்லை மாறாக பாதகமாகவே இருந்தது.நீண்ட நேர சிந்தனைக்கு பிறகு நாட்டை அழிவில் இருந்து எப்படியாவது காப்பாற்றவேண்டும் என முடிவெடுத்து அமைச்சர் சபையுடன் கலந்துரையாடுகிறான்.......அவர்கள் இதற்கு ஒரு யோசனை கூறுகின்றனர்...அதாவது நாட்டில் பிரபலமான துப்பறியும் நிபுணர்கள் இருவரை வரவழைத்து நாட்டு நிலைமை இவ்வாறு சென்றதற்கான காரணத்தை அறிவதே அமைச்சர்களது திட்டமாகும்...யோசனை கூறப்பட்ட சமயத்தில் அவ்விடத்தில் முதலமைச்சர் இருக்கவில்லை....எங்கள் கதை பிரகாரம் முதலமைச்சர் ஒரு உளறுவாயன்..அதனால் இந்த விடயத்தை பற்றி முதலமைச்சரிடம் யாரும் மூச்சு கூட விடக்கூடாது என்பது அரசன் கட்டளை.

துப்பறியும் தொழிலில் சிறந்து விளங்கும் 2 துப்பறியும் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு விடயம் பற்றி தெளிவாக விளக்கமளிக்கப்பட்டு உண்மையை அறிந்து வருமாறு அரசனால் அனுப்பப்படுகின்றனர்....
அரசனின் கட்டளையை ஏற்று அவர்களும் சபையை விட்டு வெளியே செல்ல அந்த இடத்தில் திரை மூடப்பட்டு மீண்டும் திறக்கப்படுகிறது.
திரையில் அந்த நிபுணர்கள் இருவர் மட்டும் தோன்றுகின்றனர்.எவ்வாறு இதை கண்டுபிடிப்பது என அவர்களுக்குள்ளேயே பேசிக்கொண்டு அரசசபை காவலனின் வீட்டை கடந்து செல்லும் போது உள்ளே இரண்டு பேர் பேசிக்கொண்டிருக்கும் சத்தம் கேட்கிறது....
பேசிக்கொண்டிருந்தது காவலனும் காவலனின் மகனும் தான்....அதாவது இந்த காட்சி என்னவென்றால்;காவலின் மகன் தன் படிப்பை தொடர தன் அப்பாவிடம் பணம் கேட்கின்றான்...ஆனால் காவலனிடமோ பணம் இல்லை,என்ன செய்வது என்று அறியாமல் தவிக்கின்றான்...அதற்கு மகன் மன்னன் ஏழைகளின் படிப்புச்செலவுக்காக நிறைய செலவளிக்கின்றார் என வெளியே எல்லோரும் பேசிக்கொள்கின்றனர் எனக்கூற,மனக்குமுறலை அடக்க முடியாதவனாய் காவலன் தனக்குத்தேரிந்த உண்மைகளை மகனிடம் கூறுகின்றான்....அதாவது அரசன் தெரிந்தோ தெரியாமலோ பல நல்ல காரியங்களுக்காக செலவிடும் பணத்தை எல்லாம் அந்த முதலமைச்சர் அரசனுக்கு தெரியாமல் ஆட்டையை போடுவதுதான்.....
இதை வெளியில் நின்று கேட்டுவிட்டனர் உளவாளிகள் இருவரும்....மன்னன் கொடுத்த வேலை சுலபமாக முடிந்துவிட்டது எனினும் அதனை நிரூபிக்க தற்போதைக்கு எம்மிடம் தகுந்த ஆதாரங்கள் எதுவும் இல்லை...அதை திரட்டி மன்னனிடம் சமர்பித்து அந்த முதலமைச்சருக்கு தகுந்த தண்டனை பெற்றுக்கொடுப்போம் என சபதம் மேற்கொண்டு ஆதாரம் திரட்ட கிளம்பினர் இரண்டு உளவாளிகளும்.
இருவரும் முதலமைச்சர் வீட்டுப்பக்கம் சென்று தம் வேலைகளை தொடங்கினர்....நாளடைவில் தேவையான ஆதாரங்களை திரட்டி விட்டு மன்னனிடம் சென்று அவற்றை சமர்ப்பித்து நிகழும் குற்றங்களுக்கு யார் காரணம் என்பதை கூறினர்....செய்வதறியாது குற்றத்தை முதலமைச்சருக்கு ஒத்துக்கொள்ள வேண்டியதாயிற்று
குற்றத்தை ஒத்துக்கொண்ட முதலமைச்சருக்கு தன் பாணியில் தண்டனை வழங்கிவிட்டு இனி இந்த ராஜ்ஜியத்தில் நல்லாட்சி மட்டுமே நிகழ வேண்டும் என Message கூறிவிட்டு சபை இத்துடன் கலையட்டும் என கட்டளையிட்டு அந்த இடத்தை விட்டு நீங்குகிறான் அரசன்.
ஆரம்பத்தை போல ஒவ்வொருவராக சபையை விட்டு கிளம்ப சபை திடீரென அரசன் மட்டும் திரும்பி வருகிறார்.வந்து (ஆரம்பத்தில் சொன்னேனே ஒரு அமைச்சர் மட்டும் தூங்கிக்கொண்டிருக்கிறார் என்று) அமைச்சரை எழுப்பி "நாடகம் முடிந்துவிட்டது வா கிளம்பலாம்"என தன்னுடன் அழைத்துக்கொண்டு செல்கிறார்.....திரை மூடப்படுகிறது..

இது தான் எங்கள் கதை.....இதை வாசிக்கும் போது அந்த அளவு சுவாரசியம் இருக்காது என்பது எனக்குத்தெரியும்...இருந்தாலும் முடிந்தால் நாடகத்தை நேரில் பார்த்த சக மாணவர்களிடம் கேட்டுப்பார்த்தால் சொல்வார்கள்.....இதில் முக்கிய விடயமே வசனங்கள் தான்....4 வருடங்கள் பழமையான வசனங்கள் என்பதால் எங்களில் யாருக்கும் எல்லா வசனங்களும் நினைவில் இல்ல....இந்த நாட்கள் அந்த கால கட்டத்தில் எங்கள் நகரத்தில் பிரபலமாக பேசப்பட்டற்கான காரணம் மேலே கூறப்பட்ட கதையுடன் நகைச்சுவையை தாராளமாக தெளித்துவிட்டிருந்தது தான்.குறிப்பாக மன்னனிடத்தில்.....

பின் குறிப்பு-அந்த கால கட்டத்தில் எங்கள் வயது வெறும் 16 தான்.அதனால் இப்போதெல்லாம் உள்ளது போல நல்ல குவாலிட்டி யான கேமரா,செல்போன் இருக்கவில்லை....அந்த நேரம் எங்களிடம் வெறும் VGA கேமரா Mobile தான் இருந்தது....அதனால் தான் பிரசுரிக்கப்பட்ட படங்கள் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு தெளிவில்லை என்பதை தாழ்மையோடு தெரிவித்துக்கொள்கிறேன்.

கதாபாத்திரமேற்று நடித்தவர்களின் விபரமும் அவர்களின் Facebook Profile பெயரும்.
மன்னன்---------------மணி முடி மகாராஜா---------------Ratheesh Shreeni
முதலமைச்சர்--------மலை முழுங்கி மகாதேவன்------Sujeevan Wijai
புலவர்-1---------------விஜய் முத்துப்பாண்டி--------------Mithoon N-Cage (அட நான் தாங்க)
புலவர்-2--------------அஜித் அருணாசல தேவர்-----------Hariharan Anandarajah
அமைச்சர்-1-----------குடுமித்தேவர்------------------------Kaushigan Kaushi
அமைச்சர்-2-----------வெள்ளைத்தேவர்(தூங்குபவர்)----kawshick Prasanna
காவலனின் மகன்----பெயர் இல்லை-----------------------Selvarajah Nitharshan
முதலமைச்சரின் மகன்---பெயர் இல்லை------------------Kisho Kumar
உளவாளி-1-------------கருத்து கந்தசாமி-------------------Maiuran Ncage
உளவாளி-2-------------நொண்டி லொடுக்கு பாண்டி------Thushanthan Ncage
காவலன்----------------நொண்டி குப்பம் வவ்வாலு--------Prince Viki
இன்னும் நிறைய பேர் நடிச்சாங்க சத்தியமா நினைவுக்கு வரல......

பின்னணி இசை,இயக்கம்------------------------------------Shan Dhanu.
மீண்டும் என் மற்றொரு இனிய அனுபவத்தோடு சந்திப்போம்-இவன்--Mithoon.J

Tuesday, November 23, 2010

வெற்றிக்கு வழி


மின்சாரம் தடைப்படும் போதெல்லாம்
'மெழுகுவர்த்தி'ஏற்றி
ஒளி பெறுவதைப் போல
தோல்வி அடையும் போதெல்லாம்
ஆறுதல் சொல்லி
'வெற்றிக்கு வழி'சொல்வாயே
தோழா.......

Tuesday, November 16, 2010

யப்பா.....இவிங்கலயெல்லாம் வெச்சுக்கிட்டு........


எத்தனை நாட்களுக்கு தான் வெறும் ட்ரைலரை மட்டும் எடுத்துக்கொண்டிருப்பது என வீர வசனமெல்லாம் பேசி ஏதாவது உருப்படியா செய்யணும் னு கேமரா வும் கையுமா ஏற்கனவே பார்த்து வெச்ச நல்ல லொகேஷன் க்கு நாங்க நாலு நண்பர்கள் கிளம்பினோம்......

தீர்மானிக்கப்பட்ட கதை னு ஒன்னும் பெருசா இல்ல...இருந்தாலும் நண்பர்களில் ஒருவன் சுடச்சுட ஆக்கபூர்வமா யோசிக்கக்கூடியவன்...அவன் ஒருத்தனை நம்பி மீதமா இருந்து மூணு பேரும் காட்டு வழி பாதையெல்லாம் கடந்து குறிப்பிட்ட இடத்துக்கு வந்து சேர்ந்தோம்....

மாங்கு மாங்கு னு கஷ்டப்பட்டு ஐந்து,ஆறு மணித்தியாலங்கள செலவு செஞ்சு நிறைய க்ளிப்பிங்க்ஸ் எடுத்தோம்....எங்க நாலு பெற பொறுத்தவரைக்கும் திருப்தியா வந்துச்சு.

wall papers க்கு தேவைப்படும் னு எக்கச்சக்க 4ட்டோஸ் அதாங்க photos வேற எடுத்துகிட்டோம்...

வேகாத வெயில்ல நடை நடையா நடந்து ஒரு மூணு மணிப்போல வீட்டுக்கு வந்து சேர்ந்து Editing (படத்தொகுப்பு) வேலைகள ஆரம்பிச்சோம்.....

Edit பண்ணி முடிச்சுட்டு பார்த்தா.........5,6 மணி நேரங்கள் சுருங்கி ஒன்றரை நிமிஷமா பல்லை காட்டிக்கொண்டு இருந்துச்சு.....

அதா நினைச்சு சத்தியமா சந்தோஷம் தான் பட்டோம்......காரணம் எடுக்கப்பட்ட ஒன்றரை நிமிஷமும் திருப்தியா வந்துருந்துச்சு......

இவ்வளவு நேரம் இத எதுக்கு சொன்னேன்னா நாம எல்லோரும் நாங்க பெருசா செலவெதுவுமில்லாம எடுத்துட்டிருக்க இந்த படத்துக்கே இவ்வளவு கஷ்டப்படனும்னா......நம்ம சினிமா industrie ல எடுக்குற படங்களுக்கு எவ்வளவு கஷ்டப்படுவாங்க..........

so அவங்களுக்கு நாம செய்யக்கூடிய சின்ன உதவி என்னன்னா எல்லா படங்களையும் இல்லன்னாலும் atleast ரொம்ப பிடிச்ச படங்களையாவது திரையரங்குகள்ள போய் பார்க்கிறது தான்.....

இப்போ எங்க மேட்டருக்கு வருவோம்......எங்க பட ஹீரோ ஒரு முக்கியமான விஷியமா அதாவது அவர் படிப்பு விஷியமா அங்க இங்க னு திரிஞ்சுகிட்டு இருப்பதாலும்,,,,,இருந்த 2 நண்பர்கள் மருத்துவ படிப்பை தொடர பல்கலைக்கழகம் செல்வதாலும் எங்க படப்பிடிப்பு சுமார் ஒரு வாரமளவுக்கு ஒத்திவைக்கப்படுகிறது........

ரொம்ப சீக்கிரமா எங்க படத்த நீங்க பார்க்கலாம்.....கவலபடாதிங்க......


நட்பு


உயிர் போகும் நேரத்தில்
முகம் பார்த்து உயிர் பிரிய
வேண்டும் என்று நினைக்கும் உறவு -காதல்
உயிர் போகும் போதும்
உயிர் குடுக்கத் துடிக்கும் உறவு -நட்பு.

கொட்டிக்கிடக்கும் காதல்


என்னிடம்
கொட்டிக்கிடக்கும் காதலை
எதைக் கொடுத்தும்
வங்கி விட முடியாது
காதலைத் தவிர!

Monday, November 15, 2010

ஒதுக்கப்பட்ட மக்களும்,மறுக்கப்பட்ட அங்கீகாரமும்


கடிகார முள் மாலை 4 மணியை தழுவியதுமே அவ்வளவு நேரம் இதமாக வீசிய காற்றின் கோர முகம் லேசாக வெளிப்படத் தொடங்கும் மத்திய மலை நாட்டில்.
எனினும் மனைவி மக்களின் நலன் கருதி வாட்டும் அந்த குளிரை கூட பொருட்படுத்தாமல் முழு மூச்சாக உழைத்துக் கொண்டிருக்கும் நம் மலையகத் தொழிளாலர்களுக்கு தினக்கூலிகள் எனும் பெயர் மட்டும் தான் மிச்சம்.

இந்தியாவில் இருந்து தேயிலையில் மாசி எடுக்க வந்த வம்சாவளி தான் நம் வம்சாவளி என என்னை செதுக்கிய ஆசிரியர்களில் ஒருவர் கூறக்கேட்டுள்ளேன்.அந்த பெயர் இன்னும் மாறிய பாடில்லை.

இன்று காலை வேளையில் என் நண்பர்கள் மூவருடன் photo session இற்காக நகரை விட்டு விலகி நிற்கும் ஒரு புறநகர் தோட்டப்பகுதிக்கு சென்றேன்.நேரம் சரியாக 11 இருக்கும்.சூரியன் உச்சத்தை தொட்டுக்கொண்டிருந்தது.பாதையில் நடந்து சென்ற எங்களுக்கே வியர்த்துக் கொட்டிக்கொட்டியது.ஒரு அளவுக்கு மேல் எங்களால் நடக்க முடியாமல் மரநிழலில் தஞ்சம் புகுந்தோம்.

அதாவது கொழும்பு வெயிலை போல் வியர்த்துகொட்டும் வெயில்ல அல்ல என்றாலும் அதை விட கொடுமையான சுட்டெரிக்கும் வெயில் தான் எங்கள் பகுதிகளில் அதிகமாக அடிக்கும்.இன்று கூட அவ்வாறான வெயிலில் தான் மாட்டினோம் நாங்கள்.

மரம் தந்த இதமான நிழல் ஒருபுறமிருக்க அதை அனுபவிக்க முடியாமல் கண் முன் அறங்கேரிக்கொண்டிருந்த காட்சிகள் உறுத்தின.

பாரமான கூடையை முதுகில் சுமந்து முரட்டு தேயிலை செடிகளின் மத்தியில் இல்லாத பாதைகளை கண்டு பிடித்து தேயிலை பறிக்கும் பெண்கள்,கட்டை காற்சட்டையுடன் கையில் கூரான கத்தி சுமந்து கவ்வாத்து வெட்டும் ஆண்கள்....இன்னும் பலவற்றை கூறிக்கொண்டே போகலாம்.

எல்லாவற்றையும் விட கொடுமையாக என் கண்ணில் பட்டது நான் படித்த அதே பாடசாலையில் கல்விகற்ற சகோதரன் ஒருவன் தன முதுகில் மூடையுடனும் கையில் கத்தி கொண்டும் எதிரில் நடந்து வந்தது தான்.என்ன தான் பெரிய கல்லூரியாக இருந்தாலும் எத்தனை நீதவான்கள்,மருத்துவர்,பொருளியலாளர்,முகாமையாளர் களை உருவாக்கிய போதும் மேலே கூறப்பட்ட சகோதரன் போல சிலரையும் உருவாக்கத்தவருவதில்லை.இது பாடசாலையின் பிழையோ அல்லது ஆசிரியர்களின் பிழையோ அல்ல.......சமுதாயத்தின் பிழை.

சமீப காலமாக இனவாதம் ஒடுக்கப்பட்ட நிலையிலும் நம் நாட்டின் வளர்ச்சிக்கு ஊன்றுகோலாக நிற்கும் தோட்டப்புறத்து மக்களுக்கு கிடைக்கவேண்டிய அங்கீகாரம் இன்னும் கிடைத்தபாடில்லை.

அங்கீகாரம் கிடைக்க இறைவனை பிரார்த்திப்போமாக.

------ஒரு தாய் மக்கள் நாமாவோம்------

அன்புத்தோழி அனுப்பிய அறிவுரை


நீ தேடிப்போகும் அன்பு அழகானது
உன்னைத் தேடி வரும் அன்பு ஆழமானது.

Sunday, November 14, 2010

மைனா......


ட்ரைலர் இல் போட்ட சுவாரசியமான காட்சிகளும் ஒரு குறிப்பிட்ட பாடலின் தாளம் போடும் இசையும் இப்படத்தை பார்த்தே தீர வேண்டும் என எனக்குள் ஆசை லேசாக எட்டிப்பார்த்தது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை சந்தர்ப்பமும் சிறப்பாக அமைய என் வீட்டு தியேட்டரில் முதல் முறையாக எனக்கு மட்டும் சிறப்புக்காட்சி காண்பிக்கப்பட்டது.அதாவது நான் மட்டுமே தனியாக இருந்து இந்த படத்தை பார்த்தேன் னு சொல்ல வந்தேங்க.....

இப்போ படத்துக்கு வரலாம்-
இந்தப்படத்தை பார்க்கும் போது தமிழ் சினிமா ஒரு நல்ல இடத்தினை நோக்கி நகர்ந்துக்கொண்டிருக்கிறது என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது.

இப்படிப்பட்ட படத்தை தம் பேனர்கள் மூலமாக வெளியிட தீர்மானித்த Red Giant Movies-உதயநிதி ஸ்டாலின்,AGS Entertainment-கல்பாத்தி S.அகோரம் ஆகியோர்களுக்கு முதலில் ஒரு சல்யூட்.

கதை ஆரம்பிப்பது தீபாவளிக்கு முதல் நாள் துணை சிறை அலுவலர் பாஸ்கர் வீட்டில் ஒரு தொலை பேசி உரையாடலுடன்.

சற்று மெதுவாக கதை நகர ஆரம்பிக்க லேசாக சூடு பிடிக்க தொடங்கியது மைனா....கிராமத்து பாஷைகள் சூப்பர்......சிறைக்கைதி தப்பியதால் தீபாவளியை கொண்டாட முடியாமல் தவிக்கும் போலீஸ்காரர்களின் நடிப்பு உண்மையான போலீஸ்காரர்களின் நிலையை பிரதிபலிப்பதாக அமைந்திருப்பது சிறப்பு.

கதையின் நாயகன் சுருளி தன் காதலி மைனா வை அடைய பட்டிருக்கும் கஷ்டங்கள் கொஞ்ச நஞ்சம் இல்லை.

சுருளியும் மைனா வும் சேர்ந்தபின் கஷ்டப்பட்டு பலகாரக்கடை ஆரம்பித்து பெரியாள் ஆவது போன்று காட்டி விட்டு சட்டென்று அது கனவு என தெரியவந்ததும் நாயகி மைனா "3 னே நிமிஷ பாட்ல பெரியாள வந்துட்டா எவ்வளோ நல்லாருக்கும்"னு கேக்குற இடம் கைதட்ட வைக்கிறது.

சுருளியை கைது பண்ணி போலீஸ்காரர்களான பாஸ்கரும் ராமையாவும் நாயகி மைனா வுடன் வழிமாறி மூணாரு வந்து சேர்வது ரசிக்கும் படியாக உள்ளது.

தம்பி ராமையா அந்த கேரக்டர் ஆகவே படம் முழுவதும் வாழ்ந்துள்ளார். மைனாவிட்கு காலில் அடிபட்டதும் அவளை தூக்கிக்கொண்டு பல் மருத்துவமனைக்கு சென்று டாக்டரை மிரட்டி வைத்தியம் செய்யும் இடத்திலும் போலீஸ் இற்கு எதிராக நடு ரோட்டில் சாலை மறியல் செய்யும் இடத்திலும் நாயகன் விதார்த்தின் நடிப்பு சிறப்பாக அமைந்துள்ளது.

தொடர்ந்து வரும் பஸ் பாடல் பார்க்கும் அனைவரையும் தாளம் போட வைத்திருக்கிறது.

பஸ் விபத்துக்குள்ளான பிறகு நடக்கும் அந்த குறிப்பிட்ட செயலுக்கு பிறகு பாஸ்கரும் ராமையா வும் சுருளிக்கு நன்றி சொல்லும் காட்சி நெகிழ வைக்கிறது.

சிறைக்கு வந்து சேர்ந்ததும் சுருளியை மற்ற போலீசார் ஆக்ரோஷமாக தாக்குவது அவர்களது மனக்குமுறலை வெளிக்காட்டுகிறது.

ராமையாவின் மனைவி கேரக்டருக்கு உருவம்,குரல் இல்லாத போதும் செல் போனில் அடிக்கடி வாழ்ந்திருக்கிறார்.

இதற்கு பிறகு கிளைமேக்ஸ்....சோகம் இழையோடுகிறது............

கிளைமேக்ஸ் இல் அப்படி என்ன தான் நடந்தது என்பதை தயவு செய்து படத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்....

இயக்குனர் பிரபு சாலமன் இற்கு ஒரு சிறப்பான வெற்றிப்படமாக மைனா அமையும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை....

மைனா திரைப்பட ட்ரைலரை காண இவ்விடத்தில் click கவும்






Saturday, November 13, 2010

சந்திக்க வேண்டும் காதலியை


காதலை
எப்பொழுது சந்தித்தேனோ
அப்பொழுது தொடங்கியது
என் வாழ்வு
என்றாலும்
வாழ்நாள் முடிவதற்குள்ளாவது
சந்தித்துவிட வேண்டும்
என் காதலியை

Friday, November 12, 2010

அருமையான குழு...அழகான பாடல்....


நா.முத்துக்குமார் வழக்கமாக காதல் பாடல்களில் கலக்குவார்.அவரை பற்றி சொல்லவே தேவையில்லை.இது போன்ற பாடல் புதியது என்றால் அது பாடகர் விஜய் ப்ரகாஷ் இற்கு தான்.இதுவரை காலமும் ஓம் சிவோகம்,ஹோசானா...போன்று சற்று வித்தியாசமான பாடல்கலையே தேர்வு செய்து பாடிக்கொண்டிருந்த இவருக்கு இப்பாடல் சற்று வித்தியாசம்...அதாவது இது கொஞ்சம் பீட் அதிகமான பாடல்...எனினும் சக்கை போடு போட்டிருக்கிறார் விஜய்...இவரது குரலுக்கு இப்பாடல் காண கச்சிதமாக பொருந்தியிருக்கிறது.

அட என்ன பாட்டு னே சொல்லலயா?பாஸ் என்கிற பாஸ்கரன் ல உள்ள ஐலே ஐலே.....தான்..

பாடல் காட்சியாக்கப்பட்ட விதம் சொல்லவே தேவையில்ல...அவ்வளவு சூப்பர்......
நாயகன்,நாயகி யை மிக அழகாக காட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர்.

முத்தத்தை கருவாக வைத்து பாடப்படுகிறது இப்பாடல்.எனினும் எல்லை மீறாமல் நாகரீகத்தோடு ரசிக்கும் படியாக எழுதியிருப்பது நா.முத்துக்குமாரின் திறமைக்கு ஓர் மகுடம்.

யுவனின் இசை நெஞ்சை வருடுகிறது....இது போன்ற பாடல்களை கேட்கும் போது தமிழ் சினிமா வின் trend மாறிக்கொண்டிருக்கிறது என்பது தெளிவாக தெரிகிறது....

ஆகமொத்தத்தில் இப்படிப்பட்ட ஓர் அருமையான பாடலை வெளியிட்டதில் இப்பாடல் சார்ந்த குழுவிற்கு என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

இனி இப்பாடல் வரிகள் உங்களுக்காக என் வலைத்தளத்தில்.


ஐலே ஐலே என் கால்கள் பறக்குதே மேலே...
ஐலே ஐலே வெண் மேகக்கூட்டங்கள் கீழே..

புடிச்சிருக்கு புடிச்சிருக்கு
கொதிக்குது காய்ச்சல் போலே
அணலிருக்கு குளிரிருக்கு-எல்லாமே உன்னாலே
ஒரு முத்தம் தந்து செல்கிறாய் தண்டவாளத்தை போலே...
மறு முத்தாம் ஜோடி கேட்குதே மீண்டும் தீண்டடி மேலே...
இதழ் மொத்தம் ஈரமானது பாரமானதை போலே
ஏதோ ஓர் மோகம்.....இது ஏகாந்த தாகம்....

அந்நாளில் ஆப்பில் தின்றதடி ஏவாள முத்தாம்.
பின்நாளில் ஆண்கள் வம்சத்திலே அதனால் யுத்தம்
எந்நாளும் கேட்கும் நிற்காமல் முத்தச்சத்தம்...
முத்தங்கள் மோதிக்கொண்டால் தான் உலகம் சுத்தும்.
நம் ஆதியும் அந்தமும் முத்தமே முத்தமே.....
முத்தம் தா முத்தம் தா கண்மணி.....
யாரையும் வீரனாய் முத்தமே மாற்றுமே
முத்தத்தால் தாகம் அது மின்சாரமாகும்.....

அன்பென்னும் வேதம் சொல்லுமடி அன்னை முத்தம்.....
அறிவென்னும் பாடம் சொல்லுமடி தந்தை முத்தம்...
ஆகாயம் தாண்டச்சொல்லுமடி காதல் முத்தம்...
அதனால் தான் எங்கும் கேட்குதடி வெற்றிச்சத்தம்.

என் வாழ்க்கையை மாற்றுதே முத்தமே...முத்தமே..
முத்தம் தா...முத்தம் தா...கண்மணி.......
காலமும் நேரமும் முத்தத்தால் மாறுதே....
முத்தத்தால் தேகம் அது மின்சாரமாகும்.....

இப்பாடலை காண இங்கே click கவும்.

ரயில் பயணம்


இப்பூவுலகினில் அவதரித்திருக்கும் அனைத்து மானிடப்பிறவிகளும் அனுபவிக்க ஏதுவான அம்சமான பயணமே இவ் ரயில் பயணமாகும்.

எனக்கு ரயிலில் பயணித்த அனுபவங்கள் நிறையவே உண்டு.

எனினும் சுமார் மூன்று வருடங்களுக்கு முன் தொடர்ச்சியாக ஒரு ஐந்து,ஆறு மாதங்களாக சென்று வந்த ரயில் பயணங்களை என் கடைசி மூச்சிருக்கும் வரை என்னால் மறக்க முடியாது.

காரணம் அந்த குறிப்பிட்ட காலப்பகுதியில் இந்த ரயில் பயணம் தந்த உறவுகள்,சுவையான அனுபங்கள் என பலவற்றை பட்டியலிட்டு கூறலாம்.

எங்கள் நண்பர் குழு வட்டத்தை தெரிந்தோ தெரியாமலோ ஒரு நல்ல பழக்கம் பற்றிக்கொண்டிருந்தது.வேறொன்றுமில்லை போகும் இடமெல்லாம் புகைப்படங்களை click இட்டு விடுவதுதான்.

அவ்வாறு எடுக்கப்பட்ட படங்களை பார்த்துக்கொண்டிருக்கும் போது தான் என் வலைத்தளத்தில் இதைப்பற்றி எழுத வேண்டும் என்ற எண்ணம் எனை ஆட்கொண்டது.

ஒவ்வொரு படங்களையும் next button ஐ அழுத்தி அழுத்தி பார்க்கும் போது பழைய தமிழ் படங்களில் வருவது போல் சுருள் சுருளாக நினைவுகள் நெஞ்சில் கரைபுரண்டோடுகின்றன.

அந்த காலகட்டத்தில் ஒவ்வொரு வெள்ளியும்,திங்களும் ரயில் பயணம் எங்கள் வாழ்க்கை சக்கரத்தில் இன்றியமையாத ஒரு அம்சமாக மாறிவிட்டிருந்தது.

வேறெதற்காகவும் அல்ல என் நண்பன் ஒருவனின் பதின்ம பருவத்து காதலுக்காக தான்.

ஒருவன் காதலுக்காக சுமார் 10 நண்பர்கள் ரயில் ஏறிய அளவுக்கு அதாவது அந்தளவு உத்தமமான நட்பு எங்களுக்கிடையில்.

அது அப்போது மட்டுமல்ல கடவுள் புண்ணியத்தில் இப்போதும் கூட தொடர்கிறது.

என் நண்பன் காதலித்த அந்தப் பெண் அவள் நண்பர்கள் புடை சூழ தனியார் வகுப்புக்களில் கலந்து கொள்ளும் ஒரே நோக்கோடு மலையகத்தின் முத்தாம் எங்கள் ஹட்டன் நகரை நோக்கி ரயில் மூலம் படையெடுப்பாள் வாரத்தில் இரண்டு நாட்கள்.

அந்த இரண்டு நாட்களும் நாமும் அதே ரயிலில் அவர்கள் பயணத்தில் சரிபாதி வரை கலந்து கொள்ள தவறியதில்லை.

ரயிலின் சக்கரம் போல் காலமும் தா சக்கரத்தை மெதுவாக நகர்த்த ஆரம்பித்த காலம் அது.

நாளடைவில் அந்தப்பெண்ணின் நண்பர் வட்டத்தில் ஒருத்தி என் ஆருயிர் தொழியானால்.

தொடர்ந்து வந்த இரண்டு வருடமும்.அவர்கள் இங்கேயே தம கல்வியை தொடர என் நட்பு நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே சென்றது,சென்றுக்கொண்டிருக்கிறது,நிச்சியம் செல்லும்.

அவர்கள் படிப்பு முடித்து சொந்த ஊர் திரும்பினர்.ஆனால் என் நண்பனின் காதல் இன்னும் ஒரு பக்க சில்லுடைய ரயில் போலவே தொடர்ந்துகொண்டிருக்கிறது.அதாங்க .......ஒருதலைக்காதல்

இப்போதெல்லாம் ரயிலை கண்டாலே இந்த நினைவில் அடிக்கடி மூல்கிவிடுகிறோம் நானும் அந்த குறிப்பிட்ட நண்பனும்.

இன்னும் எத்தனை வருடம் சென்றாலும் இந்த நினைவுகள் மாத்திரம் நெஞ்சை விட்டகலாது.,,,,,,,எனக்கு இந்த ரயில் தந்த அழகிய உறவு,இனிமையான அனுபவங்களை உங்களிடத்தே பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சியடைகிறேன்......

இன்னும் ஒரே ஒரு விஷியம் சொல்லனும்........
ராயல் பயணங்கள் எப்போதும் முடிவதில்லை என் நண்பனின் காதலைப்போல்.

(பி.கு-மேலே post செய்யப்பட்டுள்ள படம் எங்களால் எடுக்கப்பட்ட ஏகப்பப்பட்ட படங்களில் ஒன்றாகும்.


Thursday, November 11, 2010

முடிவு


"என்ன ஆபீஸ் இது?அஞ்சு நிமிஷம் லேட்டா வர முடியல.எது செஞ்சாலும் பாராட்டவே தெரியாத மேலதிகாரி.எதையும் புரிஞ்சுக்காத சக ஊழியர்கள்.இனியும் இந்த ஆபீஸ்ல வேலை பார்த்தா பைத்தியம் பிடிச்சிடும்.இன்னிக்கே ராஜினாமா கடிதம் கொடுக்க வேண்டியது தான்..."

-இது தான் அவள் காலையில் எடுத்த முடிவு.
லிப்டில் ஏறினாள்.உள்ளே வினு.ஆச்சர்யம்...6 ஆண்டுகளுக்கு பிறகு அவளை பார்க்கிறாள்!

"ஏய் வினு...எப்படி இருக்கடி?எங்க இந்த பக்கம்?
"நல்லா இருக்கேன்.இன்னிக்குதான் இந்த ஆபீஸ்ல செர்ந்திருக்கேன்பா..."
"இங்கயா?"-அதிர்ந்தாள்.
"ஆமாடி.என்னோட பழைய மேலதிகாரிகிட்ட கொஞ்சம் பிரச்சனை..."
"என்ன ஆச்சு வினு?"
"அவரு என்கிட்ட தப்பா நடக்க முயற்சி பண்ணினாரு.அதான்..."

வினுவே தொடர்ந்தாள்..."எல்லோரும் சொன்னாங்க ...'இங்க அஷ்வதான்னு ஒரு மேடம் இருக்காங்க...நல்லா வேல பார்ப்பாங்க,நல்லா பழகுவாங்க'ன்னு .நான் நினைச்சு கூட பார்க்கல.அது நீதான்னு.....உன்மேல எல்லோருமே நல்ல அபிப்பிராயம் வச்சிருக்காங்க....சந்தோஷம்டி.....அப்புறம் பார்க்கலாம்"என்று வினு நகர அஷ்வதா இருக்கைக்கு திரும்பினால்.

வழியில் மேலதிகாரி அழைத்தார்..."என்னம்மா எதாவது பிரச்சனையா?"

"இல்ல சார்"என்றவள் இருக்கையில் அமர்ந்தவுடன் ராஜினாமா கடிதத்தை கிழித்து எறிந்தால்!