Friday, November 5, 2010

சாதித்தது இலங்கை


இலங்கை அணி முதல் முதலாக அவுஸ்திரேலியா மண்ணில் தொடரை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.

இன்றைய ஆட்டத்தின் போது மழை இடையிடையே குறிக்கிட்ட போதும் திறம்பட விளையாடியதன் காரணமாக இலங்கை வெற்றியை ருசிபார்த்திருக்கிறது.

இன்றைய ஆட்ட நாயகனாக உபுல் தரங்க தான் பெற்ற 86 ஓட்டங்கள் காரணமாக தெரிவுசெய்யப்பட்டார்.

டில்ஷான் 47 ஓட்டங்களையும் சங்கக்கார 45 ஓட்டங்களையும் பெற்றனர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாட துவங்கிய அவுஸ்திரேலிய அணியில் 35 ஓட்டங்களை வைட் உம் 40 ஓடங்களை வாட்சன் உம் பெற்றனர்.இவர்களை தவிர ஸ்மித் 33 ஓட்டங்களை பெற்றார்.

இவர்கள் மூவரை தவிர ஓட்டங்களை பெறுவதில் வீரர்களுக்கு பெரும் சிரமம் ஏற்பட்டது.

இதனால் இலங்கை இன்றைய போட்டியில் வெற்றி பெற்று தொடரை தன்வசமாக்கியது.

போகிற போக்கை பார்த்தால் எதிர்வரும் உலகக்கோப்பை மிகவும் சுவாரசியமாக இருக்கும் என்பது மட்டும் உறுதி.

எது எப்படியோ கடந்த 14 ஆண்டுகளாக ஆசியாவின் கனவாக இருக்கும் உலக கோப்பை நம் ஆசிய நாடுகளில் ஒன்றிற்கு வந்து சேர்ந்தால் சரி தான்.

No comments:

Post a Comment