Friday, November 12, 2010

ரயில் பயணம்


இப்பூவுலகினில் அவதரித்திருக்கும் அனைத்து மானிடப்பிறவிகளும் அனுபவிக்க ஏதுவான அம்சமான பயணமே இவ் ரயில் பயணமாகும்.

எனக்கு ரயிலில் பயணித்த அனுபவங்கள் நிறையவே உண்டு.

எனினும் சுமார் மூன்று வருடங்களுக்கு முன் தொடர்ச்சியாக ஒரு ஐந்து,ஆறு மாதங்களாக சென்று வந்த ரயில் பயணங்களை என் கடைசி மூச்சிருக்கும் வரை என்னால் மறக்க முடியாது.

காரணம் அந்த குறிப்பிட்ட காலப்பகுதியில் இந்த ரயில் பயணம் தந்த உறவுகள்,சுவையான அனுபங்கள் என பலவற்றை பட்டியலிட்டு கூறலாம்.

எங்கள் நண்பர் குழு வட்டத்தை தெரிந்தோ தெரியாமலோ ஒரு நல்ல பழக்கம் பற்றிக்கொண்டிருந்தது.வேறொன்றுமில்லை போகும் இடமெல்லாம் புகைப்படங்களை click இட்டு விடுவதுதான்.

அவ்வாறு எடுக்கப்பட்ட படங்களை பார்த்துக்கொண்டிருக்கும் போது தான் என் வலைத்தளத்தில் இதைப்பற்றி எழுத வேண்டும் என்ற எண்ணம் எனை ஆட்கொண்டது.

ஒவ்வொரு படங்களையும் next button ஐ அழுத்தி அழுத்தி பார்க்கும் போது பழைய தமிழ் படங்களில் வருவது போல் சுருள் சுருளாக நினைவுகள் நெஞ்சில் கரைபுரண்டோடுகின்றன.

அந்த காலகட்டத்தில் ஒவ்வொரு வெள்ளியும்,திங்களும் ரயில் பயணம் எங்கள் வாழ்க்கை சக்கரத்தில் இன்றியமையாத ஒரு அம்சமாக மாறிவிட்டிருந்தது.

வேறெதற்காகவும் அல்ல என் நண்பன் ஒருவனின் பதின்ம பருவத்து காதலுக்காக தான்.

ஒருவன் காதலுக்காக சுமார் 10 நண்பர்கள் ரயில் ஏறிய அளவுக்கு அதாவது அந்தளவு உத்தமமான நட்பு எங்களுக்கிடையில்.

அது அப்போது மட்டுமல்ல கடவுள் புண்ணியத்தில் இப்போதும் கூட தொடர்கிறது.

என் நண்பன் காதலித்த அந்தப் பெண் அவள் நண்பர்கள் புடை சூழ தனியார் வகுப்புக்களில் கலந்து கொள்ளும் ஒரே நோக்கோடு மலையகத்தின் முத்தாம் எங்கள் ஹட்டன் நகரை நோக்கி ரயில் மூலம் படையெடுப்பாள் வாரத்தில் இரண்டு நாட்கள்.

அந்த இரண்டு நாட்களும் நாமும் அதே ரயிலில் அவர்கள் பயணத்தில் சரிபாதி வரை கலந்து கொள்ள தவறியதில்லை.

ரயிலின் சக்கரம் போல் காலமும் தா சக்கரத்தை மெதுவாக நகர்த்த ஆரம்பித்த காலம் அது.

நாளடைவில் அந்தப்பெண்ணின் நண்பர் வட்டத்தில் ஒருத்தி என் ஆருயிர் தொழியானால்.

தொடர்ந்து வந்த இரண்டு வருடமும்.அவர்கள் இங்கேயே தம கல்வியை தொடர என் நட்பு நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே சென்றது,சென்றுக்கொண்டிருக்கிறது,நிச்சியம் செல்லும்.

அவர்கள் படிப்பு முடித்து சொந்த ஊர் திரும்பினர்.ஆனால் என் நண்பனின் காதல் இன்னும் ஒரு பக்க சில்லுடைய ரயில் போலவே தொடர்ந்துகொண்டிருக்கிறது.அதாங்க .......ஒருதலைக்காதல்

இப்போதெல்லாம் ரயிலை கண்டாலே இந்த நினைவில் அடிக்கடி மூல்கிவிடுகிறோம் நானும் அந்த குறிப்பிட்ட நண்பனும்.

இன்னும் எத்தனை வருடம் சென்றாலும் இந்த நினைவுகள் மாத்திரம் நெஞ்சை விட்டகலாது.,,,,,,,எனக்கு இந்த ரயில் தந்த அழகிய உறவு,இனிமையான அனுபவங்களை உங்களிடத்தே பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சியடைகிறேன்......

இன்னும் ஒரே ஒரு விஷியம் சொல்லனும்........
ராயல் பயணங்கள் எப்போதும் முடிவதில்லை என் நண்பனின் காதலைப்போல்.

(பி.கு-மேலே post செய்யப்பட்டுள்ள படம் எங்களால் எடுக்கப்பட்ட ஏகப்பப்பட்ட படங்களில் ஒன்றாகும்.


1 comment:

  1. அருமை நண்பா படிக்கும் போதே மனம் ஏதோ ஒரு வெறுமையையும் மகிழ்ச்சியையும் உணர முடிகிறது...♥

    ReplyDelete