Saturday, January 7, 2012

நண்பன் பாடல் இல்ல இல்ல நம்ம சச்சின் சதம் அட அதுவும் இல்லீங்க எஸ்.டி.ஆர் இன் ஒஸ்தி........

அத்தனை மொழியிலும் வார்த்தை ஒவ்வொன்று கொய்தேன்....மொத்தமாய் கோர்த்து தான் காதல் சென்டொன்று செய்தேன்,,,,,என மென்மையாக ஊரெங்கிலும் ஒலித்துக்கொண்டிருக்கிறது நண்பன் திரைப்பட பாடல்......


இது ஒருபுறமிருக்க கஜினி முகமது போல் பல முறை முயற்சி செய்து கொண்டிருக்கிறார் நம்ம சச்சின்....கிட்டத்தட்ட பதினொரு மாதங்களாக தனது சதத்தின் சதத்தை எட்ட பாடை படுகிறார் மனுஷன்...ஒவ்வொரு முறையும் என்பது,எழுபதுகளிலும் ஒரு முறை தொண்ணூற்று மூன்றிலும் ஆட்டமிழந்தது என் போன்ற இந்திய ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றம்...இதில் வருத்தம் தரக்கூடிய விடயம் என்னவென்றால் சச்சின் ஆட்டமிழந்ததை மிகுந்த சந்தோஷத்துடனும்,உற்சாகத்துடனும் முதலில் நாட்டுக்கே அறிவிப்பது இலங்கையின் அதிக அளவு ரசிகர்களை கொண்டுள்ள முதற்தர வானொலியின் பிரசித்தம் பெற்ற அந்த பெண் அறிவிப்பாளர் மறுமுனையில் தென் ஆபிரிக்காவிடம் நாம் வாங்கிக்கட்டிக்கொள்வதை மறந்து விடுவது தான்..

இதையெல்லாம் மீறி சச்சின் சம்பந்தப்பட்ட ஒரு படத்தை பார்த்து சிரித்தேன்...உலகளாவிய ரீதியில் மிக பிரசித்தம் பெற்ற சமூக வலைத்தளமான பேஸ்புக் இல் இது பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது...


என்னடா நண்பன் பாடல் ல தொடங்கி சச்சின் சதத்த பற்றி பேசிட்டிருக்கானே னு தானே பாக்குறீங்க...அது வேற ஒண்டும இல்லீங்க நண்பன் படத்துல குறிப்பா அந்த பாடல் அதுலயும் குறிப்பா...அந்த வரிகள் ரொம்ப பிடிச்சு போச்சா.....அதான் அதுலயே ஆரம்பிச்சுடலாம் னு......

வாழ்க்கை போகிற போக்கு ரொம்பவே சுவாரசியமா இருக்கு,,சராசரியாக பார்த்தால் ஒரு நாளைக்கு ஒன்பதரை மணி நேரம் வேலை....அப்படி ஒரு தொழில் எனக்கு,,ஆனால் ரொம்ப புடிச்சுருக்குங்க......இப்புடி அலைஞ்சி அலைஞ்சி வெள்ளிகிழமை அதாங்க நேத்து வீட்டுக்கு வரும்போது அப்புடியே சிம்பு இல்ல இல்ல எஸ்.டி.ஆர் இன் ஒஸ்தி பாக்கலாம்னு முடிவெடுத்து அதையும் வாங்கிட்டு வந்தேன்....சாப்புட்டு முடிச்ச பிறகு என் வீட்டு தியேட்டரில் ஒஸ்தி ய ஓடவிட்டா.......   


படம் பரவாயில்லை ரகம்,,சிறு வயது சிம்பு மற்றும் ஜீவா கதாபாத்திரங்களுக்கு ஒரு அறிமுகம்,,அதன் பிறகு முரடுக்காளையாக மிரட்டும் போலீஸ் சிம்பு,,சிம்புவின் அறிமுகத்தின் போது பின்னணி இசை சூப்பர்..தமனுக்கு எதிர்காலம் உண்டு,,கதை என்னவோ வேகமாகவே செல்கிறது,,ஆனால் நாயகி பானை செய்பவர் ங்குற லாஜிக் தான் கொஞ்சம் இடிக்குது...

பிரபுதேவா போல் நாயகன் அறிமுக பாடலில் தானும் ஒரு காட்சிக்கு வந்து செல்கிறார் இயக்குனர் தரணி..ஒரு வினாடியாக இருந்தாலும் அந்த ஒரு வினாடியும் "தல" அஜீத் போலவே இருந்தார்...தமிழ் நாட்டு இயக்குனர் மத்தியில் இது இப்போது பிரபல்யம்,,இந்த கலாச்சாரத்துக்கு குருநாதர் யாரு னு தான் உங்க எல்லாத்துக்கும் தெரியுமே..அட ..நம்ம கே.எஸ்.ரவிகுமார் தாங்க..

பாடல் கள் எல்லாம் கேட்க கூடிய ராகம்,,,அனால் கலாசலா சூப்பருங்க,,,,அதுல மல்லிகா வின் குத்தாட்டம்,எல்.ஆர்.ஈஸ்வரியின் குரல் ரெண்டும் செமையாக போருந்தியிருக்கின்றன....

மொத்ததுல குடுத்த காசுக்கு கமர்ஷியலா ஒரு படம் காட்டியிருக்கிறார் தரணி,,என்றாலும் தில்,தூள்,கில்லி போல எடுபடவில்லை ஒஸ்தி....

இன்னும் நம்ம சச்சின் போல முயற்சி பண்ணுங்க தரணி சார்.......காத்துட்டிருப்போம்-காத்துட்டுருப்பேன்-Mithoon.J