Monday, December 13, 2010

என் கேமராவும் நானும்.......

ஒரு சில நாட்களுக்கு முன் என் "ரயில் பயணம்"பதிப்பில் ஒரு விடயத்தை கூறியிருந்தேன்.
"ங்கள் நண்பர் குழு வட்டத்தை தெரிந்தோ தெரியாமலோ ஒரு நல்ல பழக்கம் பற்றிக்கொண்டிருந்தது.வேறொன்றுமில்லை போகும் இடமெல்லாம் புகைப்படங்களை click இட்டு விடுவதுதான்" என்பது தான் அது.
சாதாரணமாக ஆரம்பித்த அந்த நல்ல பழக்கம் இன்று மிகப்பெரிய விருட்சமாக வளர்ந்து நிற்கிறது...அவ்வாறு "கிளிக்"கிட்ட படங்களில் எனக்கு பிடித்த படங்களை இந்த தளத்தின் மூலம் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

Location தேடி சென்ற பொது ஹட்டனை அண்மித்த பிரதேசம் ஒன்றில் என் கண்களிலும் என் கேமரா வின் கண்களிலும் பட்ட பாதியாக வளைந்து நின்ற மரம்.

நாங்கள் சென்ற உயரமான இடத்தில் இருந்து தொலைவில் தெரிந்த மலைத்தொடர்களை ரசித்து கவிதை புனைய முயன்ற நண்பன் "அருண்"

தனது அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பதை கருங்கற்களில் அமர்ந்த படியே சிந்தித்துக்கொண்டிருக்கும் அனுபவம் மிக்க ஒரு பெரியவர்

கேமராவின் இந்த ஆங்கிளுக்கு கஷ்டப்பட்டு போஸ் கொடுக்கும் என் இனிய நண்பர்கள்

மழைக்கு இருட்டிய ஒரு மலை வேளையில் தென்றலின் மெல்லிய வருடலினால் அசையாமல் அசைந்து கொண்டிருக்கும் ஒரே வகையை சேர்ந்த மூன்று மரங்கள்

வேகாத வெயிலிலும் மலை பிரதேசங்களை சூழ்ந்துள்ள பஞ்சு போன்ற மேகக்கூட்டங்கள்

ஒரு சாதாரண பள்ளத்தாக்கில் தனித்து வளர்ந்து நிற்கும் துணியில்லாத இயற்கையின் கு(கொ)டை

இரண்டு சிறிய தேயிலைகளுக்கு மத்தியில் ஒரு பெரிய கட்டிடத்தை உள்ளடக்க எடுக்கப்பட்ட முயற்சி

வளர்ந்து ஓங்கி நிற்கும் மலைகளை கூட மிகச்சாதாரணமாக தன் படைகளின் உதவியுடன் சுற்றி வளைத்துள்ள பனிக்கூட்டம்

ஒரு காலத்தில் அழகாக இருந்து சக்கை போடு போட்டுக்கொண்டிருந்த இந்த மரத்தின் இன்றைய நிலை!!!!!!

மருந்துகள் தெளிக்கப்பட்ட தேயிலை செடிகளுக்கு இடையிடையே அழகாக வளர்ந்து நிற்கும் மரங்கள்

இதை பற்றி என்ன சொல்வதென்று சத்தியமாக தெரியவில்லை.

கருங்கற் பாறைகளை கூட பிளந்து வரும் நீரின் உத்வேகம்

இலங்கையில் மிகவும் பிரசித்தி பெற்ற பல திரைப்படங்களில் கூட தன அழகை காட்டியுள்ள St.Clair நீர் வீழ்ச்சி

இயற்கை அழகை தன்னகத்தே கொண்ட கண்களுக்கு விருந்து படைக்கும் Devon நீர் வீழ்ச்சி....

இன்னும் ஆயிரக்கணக்கில் கிளிக்கிட்ட படங்கள் உள்ளன....ஒவ்வொரு பதிவாக கொஞ்சம் கொஞ்சமாக அவற்றை உங்கள் மத்தியில் பகிர்ந்து கொள்ள ஆசை படுகிறேன்.....

மீண்டும் ஒரு பதிவில் சந்திப்போம்-இவன்-Mithoon.J




2 comments:

  1. புகைப்படங்களும் அதற்குத் தகுந்த வர்ணனைகளும் அருமை . பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  2. பின்னூட்டத்தை அளித்தமைக்கு நன்றி அண்ணா...நீங்கள் என் பகிர்வை வாசித்தமை தொடர்பில் பெருமையடைகிறேன்......நன்றி.

    ReplyDelete