Tuesday, April 23, 2013

எங்கே போகுது நம் இலங்கை திருநாடு???

வீட்டில் முற்றத்தில் மாலை தேநீருடன் அனைவரும் கதை பேசிக்கொண்டிருந்தோம்.....

அந்த நேரம் அப்பா சொன்ன ஒரு கதை என் மனதை இன்னும் கூடத்தான் நெருடிக்கொண்டிருக்கின்றது....

அது.....மட்டக்களப்பு-செங்கலடி இரட்டை கொலை வழக்கு சம்பவம்.....அப்பா விஷயத்தை தெரிந்து கொண்டது முகப்புத்தகம் மூலமாக...என்று சொன்னதும்...நானும் இணையத்தில் அந்த சம்பவம் தொடர்பான கட்டுரையை தேடி கண்டுபிடித்து படிக்க ஆரம்பித்தேன்...ஒரு பள்ளிப்பருவ காதல் அன்புமிக்க பெற்றோரை ஈவு இரக்கமின்றி எப்படியெல்லாம் பழிதீர்த்துக்கொண்டது என்பதை அந்த கட்டுரையில் தெள்ளத்தெளிவாக வாசித்து அறிந்துகொண்டேன்...
                                           

கொலைக்கு தூண்டுகோலாக செயற்பட்ட மகள் 

இந்த காலத்து மாணவர்கள் காதலுக்காக இந்த அளவு கூட இறங்கி வேலை பார்ப்பார்களா என்பதை நினைக்கும் பொது சற்று வியப்பாகவும் உள்ளது...

                               

கொலையான தாய்,தந்தை

அந்த சம்பவம் தொடர்பான விரிவான கட்டுரையை வாசிக்க இங்க கிளிக்கவும் ...

இந்த சம்பவம் எனக்கு இன்னுமொரு முக்கொலை சம்பவத்தையும் நினைவூட்டியது...அது கொழும்பு-வெள்ளவத்தை முக்கொலை சம்பவம்...

                          
                                            கொலையான தாய்,தந்தை,மகள்
                                                         

அந்த சம்பவம் கூட தன் தகுதிக்கு மீறி கடன் பட்டு சுகபோக வாழ்க்கையை அனுபவித்து விட்டு பின் தன் தந்தைக்கு கிடைத்த ஊழியர் சேமலாப நிதியை குறிவைத்து மேட்கோள்ளப்பட்டது தான்...

                               
கொலையாளி மகன் - ப்ரஷான் குமாரசாமி 

இப்படி பணத்துக்காகவும்,காதலுக்காகவும் பெற்ற தாய்,தந்தையையே  செய்ய துணிந்துவிட்ட இன்றைய சமூகத்தை நினைக்கும் பொழுது என் மனதில் துளிர் விட்ட அந்த கேள்வி தான்...

"எங்கே போகுது நம் இலங்கை திருநாடு???"

இப்படிக்கு - Mithoon.j.