Saturday, December 31, 2011

2011 தமிழ் திரை உலகு ஒரு கண்ணோட்டம்

2011 தமிழ் சினிமாவுக்கு ஒரு எழுச்சியான ஆண்டாகவே அமைந்தது என்பதில் எவ்வித ஐயமும் இல்லை......சொல்லி பெருமைப்பட்டுக்கொள்ள ஒருசில திரைப்படங்கள்,பார்த்து பரவசப்பட இன்னும் சில திரைப்படங்கள் என ஒரு கொண்டாட்டமாகவே கழிந்தது இவ்வாண்டு தமிழ் திரையுலகுக்கு...

அவ்வாறு வெளிவந்து இவ்வாண்டில் சக்கை போடு போட்ட ஒருசில திரைப்படங்களையும் பாடல்களையும் வரிசைபடுத்த முயன்றதின் ஒரு தொகுப்பு.....

 
 ஆடுகளம் 6 தேசிய விருதுகளை அசால்ட்டாக தட்டிச்சென்ற திரைப்படம்...தனுஷின் நடிப்பு அபாரம்,,வெற்றிமாறனின் இயக்கத்தில் யதார்த்தம் தெரிகிறது,,உண்மையா சொல்லன்னும்க டாப்சியின் நடிப்பு செயற்கை தான்..இறுதியாக நம்ம ஜி.வி க்கு சிறப்பு அங்கீகாரம் தான் கொடுக்கனும் ...காரணம் "ஒத்த சொல்லால" பாடல் தாங்க......

அடுத்து நம்ம தளபதியின் காவலன்..எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாது சமீபத்தில் வெளிவந்த தளபதியின் திரைப்படம் இதுவாக தான் இருக்க முடியும்..அதனாலயோ என்னவோ படம் பாராட்டுக்களை அள்ளிக்குவித்தது....விஜயின் நடனம் கொஞ்சம் மிஸ்ஸிங்,,சித்திக்கின் இயக்கம் அவரின் பழைய படங்களை நினைவூட்டுகிறது,,அசின் வழமை போல பேச்சிலும்,சிரிப்பிலும் பலே,,வித்யாசாகர் நீண்ட இடைவெளிக்கு பிறகு வெளுத்துக்கட்டியிருக்கிறார்,,

தெய்வத்திருமகள்,,விக்ரமின் இன்னுமொரு வித்தியாசமான முயற்சி..வேறு எந்த நடிகருக்கும் இல்லாத துணிவு நம் விக்ரமுக்கு,,ஆனால் அந்த துணிவு அவருக்கு நன்றாகவே கை கொடுத்திருந்தது,,சாரா,விக்ரம் தவிர படத்தின் மென்மையான பாடல்கள் மட்டுமே போதும் படத்தின் அபார வெற்றிக்கு...மழைக்கு பின் இலையில் இருந்து சொட்டு சொட்டாக நீர் விழுவது போன்ற உணர்வை மிக அழகாகவே சொல்லியிருக்கிறார் இயக்குனர் விஜய்,,

 மயக்கம் என்ன,,நிறைய பேருக்கு படம் முடிந்த பிறகு தான் கதையே புரியும்,,மிக அழகான கதை,,அதனை தனக்கே உரிய விதத்தில் சொல்லியிருக்கிறார் இயக்குனர் செல்வராகவன்,,இவ்வருடத்தில் தனுஷின் இரண்டாவது ஹிட்,,அதிலும் தனுஷ் பாடிய இரண்டு பாடல்களுமே மெகா
ஹிட்,,ஜி.விக்கும் இவ்வாண்டு சிறப்போ சிறப்பு தான்

வாகை சூடவா-மிகச்சிறந்த கிராமத்து சித்திரம்,,விமல் கதாபாத்திரம் மிக இயற்கையாக அமைக்கப்பட்டுள்ளது,,இனியா வின் நடிப்பும் சூப்பர்,,பாடல்கள் மனதை தீண்டும் வகையில் அமைகப்பட்டுள்ளன,,

வரிசை படுத்தப்பட்ட திரைப்படங்கள் தவிர மங்காத்தா ,எங்கேயும் எப்போதும்   மற்றும் இன்னும் எத்தனையோ தமிழ் திரை படங்கள் 2011 இல் வெளிவந்து சக்கை போடு போட்டன,,குறிப்பாக இவ்வாண்டு வெளிவந்த பாடல்கலுள் சூப்பர் ஹிட ஆனா சில பாடல்களையும் பார்க்கலாம்,,

ஒஸ்தி-நீண்ட இடைவெளிக்கு பின் எல்.ஆர.ஈஸ்வரியின் குரலில் கலாசலா,,  
 காவலன்-யாரது,,
 மயக்கம் என்ன-அட்ரா அவல..
 ஆடுகளம்-ஒத்த சொல்லால 
தமிழ் திரையுலகு மட்டுமிள்ளது உலக இசைத்துறையையே திரும்பிப்பார்க்க வைத்த பாடல்,,-y this kolaveri 

வரிசை படுத்தப்பட்ட பாடல்கள் மட்டுமில்லாது இன்னும் ஏராளமான திரைப்படங்களும்,பாடல்களும் கூட சக்கை போடு போட்டன,,அதே போல பிறக்கும் 2012 ம் ஆண்டிலும் சிறந்த சில திரைப்படங்களையும் பல பாடல்களையும் எதிர்பார்த்து காத்திருக்கும் இவன்- Mithoon Jeyaraj.

Saturday, September 24, 2011

இரண்டாம் வருட ஒன்று கூடல் 2011

கண் மூடி திறக்கும் முன் ஓடோடி விட்டது ஓராண்டு...ஓராண்டு இடைவெளியில் எத்தனை எத்தனையோ மாற்றங்கள்...இதில் சந்தோஷமான விடயம் என்னவென்றால் சென்ற முறை சந்தித்ததை விட எல்லா நண்பர்களும் தத்தம் வாழ்க்கையில் ஒரு படி மேலே நின்றனர்...

சென்ற முறை போல் அல்லாது இம்முறை facebook மூலமாக தான் இடமும்,தினமும் முடிவானது...முடிவான தினத்தில் இருந்து ஒன்று கூடல் நடைபெற்று முடியும் வரை நிகழ்ந்த அனைத்து விடயங்களும் விறுவிறுப்புக்கு குறைவில்லாதவை...

நண்பன் ஷாம் தான் இம்முறை பொறுப்பேற்று சிறப்புற நடத்தியும் வைத்தார்...ஒவ்வொரு ஏற்பாட்டிலும் கண்ணும் கருத்துமாக இருந்தமையால் ஒரு நயா பைசா கூட கணக்கு தவறவில்லை...தான் ஒரு வங்கி ஊழியன் என்பதில் சற்று கராறாகவே நடந்து கொண்டார்....

 திகதி ஆகஸ்ட் 13 என முடிவானது...திகதி முடிவான தினத்தில் இருந்து சரியாக ஒன்றரை மாத இடைவெளி இருந்தது ஒன்றுகூடலுக்கு......வாரம் இருமுறை ஒன்று கூடலுக்கான திட்டமிடலுக்காக காலிமுகத்திடலிலும் வெள்ளவத்தை கடற்கரை ஓரத்திலும் சந்தித்துக்கொண்டோம்......திட்டமிடல் முடிவடைந்து

அடுத்து ஒவ்வொருவரையும் தேடி கண்டுபிடித்து ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக சொல்லிமுடிக்கும் முன் போதும் போதும் என்றாகிவிட்டது.....அதுமட்டுமல்லாது இம்முறை அனைவருக்கும் அழைப்பிதழும் கொடுக்கப்பட்டது...நாட்கள் நகர நகர ஏதோ இனம்புரியாத ஓர் உணர்வு மனதினை பற்றிக்கொண்டு நின்றது....

வந்து சேர்ந்தது அந்த எதிர்பார்க்கப்பட்ட இனிய நாள்....காலை நேரம் 9ஐ நெருங்கும் போதே குறிக்கப்பட்ட இடத்திற்கு சென்று காத்திருந்தோம் நான்,கிஷோ,ரம்சி,மணி....பின் நேரம் செல்ல செல்ல ஒவ்வொருவராக வந்து சேர ஆரம்பித்தனர்.கோலாகலம் ஆரம்பித்தது....நேரம் தன் வேகத்தை மேலும் அதிகப்படுத்திகொண்டு சுழல ஆரம்பித்தது போலும்...

குறிப்பாக நண்பன் சஞ்சித் வந்து சேர்ந்ததும் ஏனையவர்களால் கொடுக்கப்பட்ட வரவேற்பு சற்று அபாரமாகவே இருந்தது......மணி இரண்டானது....அந்த நீள மேஜையில் அனைவருக்கும் மதிய உணவு பரிமாறப்பட்டது.....சாப்பிடும் போதும் சாப்பிட முன்பும் சாப்பிட்ட பிறகும் மிக முக்கியமாக கதைக்கப்பட்ட விடயம் தான் "மர்ம மனிதன்".....அதாங்க ..."கிரீஸ் மனிதன்" ....காரணம் அன்றைய தினங்களில் எங்கள் பகுதிகளில் இந்த மர்ம மனிதர்களின் நடமாட்டம் சற்று அதிகமாகவே காணப்பட்டது தான்.கலகலப்பாக நேரம் சென்றது....சொல்லப்போனால் நேரம் எப்படி சென்றது என்றே தெரியவில்லை...மாலை நான்கு மணிக்கு குளிருக்கு இதமான கொப்பி வழங்கப்பட்டது...கொப்பியுடன் நண்பன் ஷியாம் முடிவுரை ஆற்றினான்...இவ்வாறு இனிதே நிறைவுற்றது அந்த இனிய நாள்.....
அடுத்த வருடம் இந்த நாளுக்கான எதிர்பார்ப்பு என் மனதின் ஓரத்தில் இப்பொழுதே எட்டிப்பார்க்க ஆரம்பித்திருக்கிறது...

அடுத்த தடவை கூட இதே போன்று நட்புனர்வுடனும் ஒற்றுமையாகவும் என் ஆருயிர் நண்பர்களை சந்தித்தே ஆக வேண்டும் என்று இறைவனை வேண்டிக்கொண்டு விடைபெறும் இவன்-Mithoon.J

Saturday, August 20, 2011

ஒப்பாரி கோச்சி

நேற்றைய தினம் அரை நாள் வேலை...வேலையை முடித்து விட்டு வீட்டிற்கு செல்லலாம் என்னும் முடிவு..வீட்டிற்கு போகப்போகிறோம் என்ற எண்ணம் அவ்வப்போது புது உற்சாகத்தை அளித்துக்கொண்டே இருந்தது....வண்டியை போட்டுவிட்டு நீண்ட நாட்களுக்கு பிறகு பஸ்சில் போகலாம் என்பது என் முடிவு...நேரம் 1 மணியை தொட்டது..நண்பன் ஒருவனின் வீட்டில் வண்டியை பார்க் செய்து விட்டு புறக்கோட்டை நோக்கி 187 இல் பயணம்....சனிக்கிழமை ஆகையால் வாகன நெரிசல் சொல்லிக்கொள்ளும் அளவு இல்லை..சரியாக 22 நிமிடங்களில் புறக்கோட்டை பஸ் தரிப்பு நிலையம்...அங்கு நண்பன் தக்க்ஷன் எனக்காக புறப்பட தயாராக இருந்த வண்டியில் ஓர் இருக்கையை பிடித்துக்கொண்டு அமர்ந்திருந்தான்.....

வண்டி புறப்பட்டது....வேண்டிய பச்சை நிற அப்பிளை ஆளுக்கு பாதி கொறித்தாகி விட்டது.அடுத்த கட்ட நடவடிக்கை???? வழமையாக ஊர் செல்லும் போது அந்த 129 கீ.மீ. தூரத்தையும் பாடல் கேட்டுக்கொண்டே கடப்பது வழக்கம்...இம்முறையும் அதையே செய்யலாம் என கைப்பேசியை வெளியில் எடுத்த போது தவறி என் கண்ணில் பட்டது தான் "ஒப்பாரி கோச்சி"...

தக்க்ஷன் ஏற்கனவே இந்த ஒப்பாரி கொச்சியை பற்றி என்னிடம் கூறியுள்ளான்..ஆனால் நேற்றைய நாள் வரை வாசிக்க எனக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைக்க வில்லை...என் மனம் சட்டென்று மாறியது...கைப்பேசியை நண்பனிடம் கொடுத்து விட்டு ஒப்பாரி கோச்சி யை கையில் எடுத்தேன்...

 பஸ் வண்டி வழமைக்கு மாறாக வேகமாக நகர தொடங்கியது...ஒப்பாரி கோச்சி யும் வித்தியாசமாக நகர தொடங்கியது...உண்மையை சொல்வதானால் அந்த கதையை வாசிக்க வாசிக்க நம் மலையக வாழ் தோட்டப்புற மக்கள் அன்றும் இன்றும் படும் சொல்லன்னா துயரங்கள் என் கண் முன் வந்து வந்து போயின..."உடரட்ட மெனிக்கே" "ஒப்பாரி கோச்சி" ஆன கதை நான் சொல்லவதை விட நீங்களே படித்து பார்த்தீர்களானால் இன்னும் சுவாரசியமாக இருக்கும்,,,,இந்த கதை தொகுப்பு முற்றும் முழுவதுமாக நம் மத்திய மலை நாட்டை கருவாக வைத்து எழுதப்பட்டிருக்கிறது...இந்த தொகுப்பில் என்னை இன்னும் வெகுவாக கவர்ந்த சிறுகதை "வழித்துணை".....
இந்த கதை நான் நேரில் பார்த்த அற்புதமான ஆசிரியர் அமரர்.உயர்திரு.திரு ஜீவராஜன் அவர்களுடையது...சொல் நடைகளும் வசன அமைப்புகளும் அப்படியே அவரை நினைவு படுத்தின...அவரின் இழப்பு மலையக கல்வி எனும் தூணில் விழுந்த ஓர்வெடிப்பு....

கதைகள் கடைசி கட்டத்தை நெருங்கின...என் உடல் சிலிர்த்தது...யன்னல் வழியாக வெளியே எட்டிப்பார்த்தால் பள்ளத்தாக்குகளும் மலை முகடுகளை முத்தமிடும் மேக கூட்டங்களும் கொஞ்சி விளையாடிக்கொண்டிருந்தன...என் ஊரை நெருங்கி விட்ட உற்சாகம் எனக்குள் ஊரிப்போனது......எத்தனையோ பஸ் பயணங்களில் இப்பயணத்தை "ஒப்பாரி கோச்சி" ஒரு மறக்க முடியாத பயணமாக மாற்றி விட்டது...

ஆதிக்கங்கள் நிறைந்த இம்மண்ணில் உண்மையான சுதந்திர காற்றை எப்போது தான் சுவாசிக்க போகிறேனோ என எண்ணி புத்தகத்தை மூடினேன்......உண்மையான சுதந்திர காற்றை எதிர்பார்த்து நிற்கும் ஓர் மலையக இளைஞனாய்......... 

Saturday, June 25, 2011

60 நாட்களுக்கு பிறகு......................................

பதிவுக்கான தலைப்பை யோசிக்க தான் நேரம் அதிகமாக விரயமாக்கப்பட்டது.முன்பெல்லாம் வாரம் ஒருமுறை பதிவெழுதும் நான் இப்போதெல்லாம் கணினி முன் அமர்வதே வாரம் ஒரு முறை தான்....
ஆம் முன்பு வேலை வெட்டி இல்லாமல் இருந்தபோது வீட்டில் நேரம் போவதே இல்லை.ஆனால் இப்போதெல்லாம் வார இறுதி விடுமுறையில் வீட்டிற்கு வந்தால் நேரம் போவதே தெரிவது இல்லை...

தலைநகரில் வேலை...நாட்டின் மிகப்பிரபலமான மருந்தக நிறுவனத்தில் பணி...வேலை செய்ய ஓர் கார் வண்டி..சொகுசான வாழ்க்கை,இன்பமான வதிவிட சூழல்...என என்னை சுற்றி எல்லாமே சாதகமாக அமைந்தாலும் என் வீட்டினை மிக மோசமாக தவறவிடுகிறேன்....

வண்டி ஓட்ட ஓரளவு தெரிந்திருந்தாலும் தலைநகர வாகன நெரிசலுக்கு மத்தியில் என்ன செய்வது என்ற கேள்வி என் மத்தியில் ஆரம்பத்தில் இருந்தது...என்றாலும் நான் நம்பிக்கையை விடாமல் முயற்சி செய்ய அதுவும் கூட சாதகம் தான்...மாதம் ஒன்று விரைந்து ஓட தொழிலின் நுணுக்கங்கள் கொஞ்சம் கொஞ்சமாக தெளிவாகின...இப்போது அவற்றை நடைமுறை படுத்த முழுமூச்சாக ஈடுபட்டிருக்கிறேன்.......

வேளையில் மூழ்கியிருந்த சமயம் ஒரு தொலைபேசி அழைப்பு என் அலைபேசிக்கு...
உத்தரவு கொடுத்து பேசியை காதில் வைத்தால் மறுபுறத்தில் நண்பி....தன் திருமணம் குறித்த ஒரு நாளில் நிச்சயிக்கப்பட்டுள்ளது எனவும் திருமண நாளன்று எம் பாடசாலை நண்பர்கள் எல்லாரும் வருவார்கள் எனவும் கூறி எனக்கும் அழைப்பு விடுத்ததன் பின் பேசி துண்டிக்கப்பட்டது...

அன்றைய தினம் எம் வாழ்வில் மறக்கமுடியாத நாட்களில் ஒன்றானது...காரணம் எம் மத்தியில் நடக்கும் முதலாவது உத்தியோகபூர்வ திருமணம் அதுவாகும்...

கீழே உள்ள புகைப்படம் அந்த மனநாளில் எடுக்கப்பட்டது...."நண்பர்கள்"அந்த மன விழாவிற்கு வருகை தந்தனர்...பாடசாலையின் கிறுக்கல்கள் அங்கும் தொடர்ந்தன...பொழுது மிக சீக்கிரமாக விரைய மறுநாள் நீண்ட தூரம் பயணிக்க வேண்டும் என்ற எண்ணம் உண்மையாகவே ஏதோ செய்தது...தலுவல்களுடன் நண்பர்கள் பிரிய....கண் கலங்கியது...தவறவிட்ட அந்த நாளை எண்ணி... 
 2ம் வருட ஒன்றுகூடளுக்கான பேச்சுக்கள் ஆங்காங்கே அடிபட துவங்கியுள்ளது...மிக அருகில் அந்த நாள் என்பது மட்டும் பொய் இல்லை...மீண்டும் நண்பர்களை சந்திக்கும் அந்த ஒரு சில மணித்தியாலங்களுக்காக இன்னும் எத்தனை மணித்தியாலங்கள் காத்துக்கிடக்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுமோ என்பது தெரியவில்லை...அந்த காத்திருப்பிலும் ஒரு சுகம் இருக்கத்தான் செய்கிறது,,,
நண்பர்கள் எனும் உலகினில் நட்பு எனும் வாழ்க்கைக்காக காத்து நிற்கும் இந்த நண்பன்......Mithoon.J

Saturday, March 19, 2011

பயணம்

நீண்ட நாட்களுக்கு பிறகு வலைத்தளம் எழுத இன்று தான் ஓர் வாய்ப்பு கிடைத்தது.....
நேற்றைய தினம் பூரணை தினம் ஆகையால் சனி,ஞாயிறு 2 நாட்களாக சேர்த்து விடுமுறை கிடைத்தது.
வெள்ளிக்கிழமை இரவு பேருந்து மூலமாக வீடு நோக்கி கிளம்பினேன் தலைநகரில் இருந்து....

வீடு வந்து சேர நள்ளிரவு 12 ஆகிவிட்டது.....மறுநாள் சனியன்று காலை அம்மா சமைத்த உணவு....கடை சாப்பாட்டை சாப்பிட்டு சாப்பிட்டு மரத்து போயிருந்த நா விற்கு ஒரே குஷி.....

சாப்பிட்டு விட்டு facebook இல் சிறிது நேரம் கழிந்தது....பின் நண்பனின் தொலைபேசி அழைப்பு....என நேரம் வேகமாக கரைந்து கொண்டிருந்தது......

பகல் உணவு........முடித்துவிட்டு அடுத்து என்ன என ஆழ்மனது ஓர் கேள்வியை முன்வைத்தது....படம் பார்க்கலாம் என முடிவாகவே.....என் வீட்டு தியேட்டரில் ஓட ஆரம்பித்தது "பயணம்"

வேகமான திரைக்கதையை கொண்ட திரைப்படம்,படம் ஆரம்பித்ததில் இருந்து முடிந்தது வரை விறுவிறுப்பாகவே நகர்ந்தது.....

ஆங்கிலப் படங்களின் சாயல் சாரல் சாரலாக வீசிக்கொண்டிருந்தாலும் இது ஒரு தமிழ் படம் என்பதால் இம்முயற்சி நிச்சயமாக பாராட்டுக்குரியது தான்.....

ராதாமோகன்,பிரகாஷ்ராஜ் கூட்டணிக்கு மீண்டும் ஓர் வெற்றி.....

படம் வெற்றியடைய முக்கிய காரணமாக கதாபாத்திரங்களின் யதார்த்த நடிப்பு ஓர் காரணி.

டீலா நோ டீலா ரிஷி க்கு இன்னுமோர் புதியமுகம்....
 வில்லன் கூட்டத்தின் நடிப்பு கூட செமையாக இருந்தது...

கதையை நான் இங்கு எழுதினால் பார்க்கும் போது சுவாரசியமாக இருக்காது........

தன பிறகாவது தமிழில் இது போன்ற படங்கள் வெளிவருமாயின் அது தமிழ் சினிமா வின் எதிர்காலத்திற்கு நல்லது.......

இந்த வாரம் ராதாமோகனின் "பயணம்" என் விடுமுறைக்கு ஓர் அர்த்தத்தை வழங்கியது........

வரும் வாரம் கெளதம் வாசுதேவ் மேனன் இன் "நாடு நிசி நாய்கள்" பார்க்கலாம் என ஓர் எதிர்ப்பார்ப்பு.....

மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்கும் வரை விடைப்பெரும் இவன்-Mithoon.J

Saturday, January 29, 2011

127 Hours

Slumdog Millionaire வெற்றிக்கு பின் Danny Boyle யின் அடுத்த முயற்சி 127 HOURS.Aron Ralston எனும் Mountain Climber இன் உண்மை கதையே இது.பின்னணி இசை A.R.Rahman.வழமை போலவே ஒளிப்பதிவு வெளுத்துக் கட்டியிருக்கிறது.எண்ணில்லா கேமராக் கோணங்கள் படத்தில் விளையாடியிருக்கிறது.Jon Harris இன் Editing படத்திற்கு மேலும் வலு சேர்த்திருக்கிறது.

ஆரம்பம் முதலே கதை விறுவிருப்பாக நகர்வதால் ரசிகர்களின் கவனம் முழுதும் படத்திலேயே இருக்கும்படி அமைந்திருக்கிறது.நேரம் செல்லச்செல்ல கதையின் வேகம் அதிகரிக்கிறது....

இந்த திரைப்படம் கூட உலக சினிமா வரலாற்றின் ஓர் மைல்கல்லாக அமையும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

இடையிடையே ராவணன் திரைப்பட பின்னணி இசை எட்டிப்பார்க்கிறது..எனினும் அதனிலும் மேலாக A.R.Rahman இன் புதிய பின்னணி இசை Hollywood இல் அவருக்கான ஓர் தனி இடத்தை பெற்றுக்கொடுக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

கதை ஒரே ஒரு கதாப்பாத்திரத்தை மட்டுமே சுற்றி நகர்கிறது...கதைப்படி நாயகன் ஒரு Adventures விரும்பி.

ஒருமுறை நாயகன் அவ்வாறான Adventure Trip இல் ஈடுபட்டிருக்கும் போது ஒரு இடரில் மாட்டிக்கொள்ள நேரிடுகிறது.அந்த வகையில் தான் மாட்டிக்கொண்ட இடரில் இருந்து தன்னை காப்பாற்றிக்கொள்ள 127 மணி நேரம் போராடிய விதமே படமாக எடுக்கப்பட்டுள்ளது.

நடிப்பில் தன்னால் இயன்ற உச்சத்தை எட்டியிருக்கிறார் James Franco.
படத்தில் கத்தி கதாநாயகன் ஆகி நான் பார்க்கமுடியாமல் கண்ணை மூடிக்கொண்ட உச்சகட்ட காட்சிகளும் உண்டு.....அந்த இடங்களில் சிறப்பாக ஒளிப்பதிவாளர் செயற்பட்டுள்ளார்.பின்னணி இசையும் கூட அந்த குறிப்பிட்ட இடத்தில் நெருடலை நம்மிடையே கொண்டு வந்து சேர்க்கிறது.

கதையை வாசிப்பதை விட இந்த மாதிரி திரைப்படத்தை பார்த்து திருப்தியடைவது பொறுத்தமாக இருக்கும்....

அந்த ஒரு காரணத்தினால் மட்டுமே கதையின் கருவை மாத்திரம் மேலோட்டமாக விவரித்திருந்தேன்.

நான் வழமையாக DVD வாங்கும் இடத்தில் இந்த திரைப்படம் இருந்ததாக ஞாபகம்...எனினும் நான் வழமை போல Torrent இல் தரவிறக்கி தான் படம் பார்த்தேன்.

"Torrent" இதனை கிளிக்குவதன் மூலம் படத்தை இலகுவாக தரவிறக்கிக் கொள்ளலாம்.

தமிழிலும் இது போன்ற ஓர் திரைப்படத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கும் இவன்-Mithoon.j



Saturday, January 15, 2011

முதலாம் வருட ஒன்று கூடல்-2010

படிப்புக்கும் விடாமுயற்சிக்கும் முதலிடம் கொடுத்து பலவிதமான எதிர்பார்ப்புகளோடும் கனவுகளோடும் உயர்தர கல்விக்காக பாடசாலை சென்ற முதல் நாள்............நேற்று தான் போல உள்ளது ; ஆனால் அது நடந்து 3 வருடங்களும் 4 மாதங்களும் கடந்து 5வது மாதம் வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கிறது.

உயர்கல்விக்காக பாடசாலை சென்ற அந்த 23 மாதங்களும் என் வாழ்வின் பொற்காலங்களாக என் மனதில் இன்றும் கூட பதிந்து நிற்கின்றன.

அந்த 23 மாதங்களும் சிறு சிறு காதல்,சண்டை,நட்பு,போட்டி என நான் காணாதது ஒன்றுமே இல்லை எனலாம்.,மனதினுள் நட்பு இருந்தாலும் இரண்டு குழுக்களாக பிரிந்து சண்டை பிடிப்பதும்,எதிரணியை வீழ்த்த சிற்றுண்டிச்சாலை Plan tea யுடன் திட்டம் தீட்டுவதும் என சுவாரஸ்யத்தின் உச்சத்தில் என் வாழ்க்கை நகர்ந்து கொண்டிருந்த கால கட்டம் அது....

ஆசிரியர்களின் பலவகையான கண்டனங்களுக்கும்,அறிவுறைகளுக்கும் ஏன் தண்டனைகளுக்கும் கூட குறைவில்லாமல் இருந்தது.......அதிபரிடம் செய்யாத தவறுகளுக்கு அடிக்கடி வாங்கிக்கட்டிக்கொள்வது என துன்பங்கள் கூட அப்பப்போ எட்டிப்பார்த்துக்கொண்டிருந்தது.

அந்த 23 மாதங்களில் எனக்கு மிகவும் பிடித்த பாடலாக "சந்தோஷ் சுப்ரமணியம்" திரைப்படத்தில் "அடடா அடடா"பாடல் இருந்து வந்தது.அதற்கு காரணம் இல்லாமலும் இல்லை.அந்தக் காரணம் கூட எங்கள் நட்பு வட்டம் மேலும் வலுவுற,வளர ஏதோ ஒரு வகையில் சிறிதளவேனும் உதவி புரிந்தது.

இதற்கிடையில் மாதங்கள் வேகமாக புரண்டோட வந்து சேர்ந்தது 2009ம் ஆண்டு ஜூலை மாதம்.இறுதி முன்னோடிப் பரீட்சைகள் முடிவடைந்த பின் நண்பர்களுக்கு பிரியாவிடை அளிக்க ஒரு விழா ஏற்பாடு செய்யலாம் என நண்பி "சரண்யா" IDEA தர ஏற்பாடுகளை செய்வதில் மும்முரமானோம்.....

விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்ட திகதி ஜூலை 7ம் திகதி காலை 8 மணியளவில் எல்லா நண்பர்களும் ஒன்று கூட விழாவிற்கான உற்சாகம் மெல்ல மெல்ல எங்கள் மத்தியில் வரத்தொடங்கியது.அந்த நேரத்தில் ஒரு முழு கண்ணாடிப்பெட்டி கீழே விழுந்து நோருங்கியதைப் போல் அதிபர் வந்து அனைவரையும் வீட்டிற்கு செல்லுமாறும் விழா நடத்த அனுமதியெல்லாம் வழங்க முடியாது என்றும் கூறி வீட்டிற்கு அனுப்பி வைத்தார்.....

எதிர்பாராத விதமாக நடந்து இந்த விடயத்தால் மனம் நொறுங்கிப் போனோம் நாங்கள்.அன்று அந்த நொடியில் நொறுக்கப்பட்ட அந்த இதயங்களை மீண்டும் ஒட்ட வைத்தது வகுப்பறை தோழர்களின் கனிந்த பார்வைகளும் பேச்சுக்களுமே....

அன்றைய தினம் பகல் உணவை நாங்கள் 6 நண்பர்கள் ஒன்றாக பகிந்துகொண்டோம்...அந்த நேரத்தில் எப்படியாவது பரீட்சைகள் முடிந்து அடுத்த வருடமாவது Batch Get To Gether ஒன்றை நடத்தியே ஆகவேண்டும் என ஒரு நண்பன் கதையை ஆரம்பிக்க எப்படியாவது அதனை நடத்திவிட வேண்டும் என எங்கள் அனைவருக்குள்ளும் கூட ஏதோ ஒன்று பரவத்தொடங்கியது.

பரீட்சைகள் முடிந்தன......நண்பர்கள் பிரிந்தனர்,4 மாதத்தில் பரீட்சை முடிவுகளும் வந்து சேர்ந்தன...பரீட்சை முடிவுகள் திருப்தி அளிக்கும் வகையில் இருந்தன.நாட்கள் காற்றுடன் கலந்து வேகமாக கரைந்தன.....

ஒவ்வொருவரும் யதேச்சையாக எங்காவது சந்தித்துக்கொண்டால் குசலம் விசாரிக்கும் அளவு இடைவெளி விழுந்து கிடந்தது......Autograph இல் குறித்துக்கொடுத்த பாதி Mobile நம்பர்கள் வேலைசெய்வதில்லை....புதிய நட்புக்கள் நிறைய அறிமுகமானாலும் பல வருட காலமாக இருந்து வந்த நட்பல்லவா பாடசாலை நட்பு.....அவ்வளவு எளிதில் யாராலும் யாரையும் மறந்து முடியவில்லை....

கால சக்கரம் தன் கடைமையை சிறிதும் பிழையின்றி செய்து வந்து கொண்டிருந்தது.....உப்பு சப்பில்லாமல் வாழ்க்கை நகர்ந்து கொண்டிருந்த சமயம் நண்பன் ரம்ஸான் இன் தொலைபேசி எண்ணில் இருந்து வந்து சேர்ந்தது ஒரு குறுந்தகவல்........

sweet school memories:
1.Oneside love's
2.Silent mode mobiles
3.Last bench comedies...
4.intervel plantea
5.escape frm seminars
6.last period galatas
7.B'dy treats
8.Last minute preparetions
9.Over night study for nxt dy xam
10.friend's family functions
11.Internal marks probs
12.Gang fights.....
those days will never come
again...

இந்த குறுந்தகவலை படித்த நேரம் நண்பனின் மனதில் பழைய பாடசாலை நினைவுகள் எல்லாம் ஓடியிருக்கின்றன.....அவன் அதை எனக்கு Forward செய்தான்...நான் இன்னும் பலருக்கு Forward செய்தேன்....

உண்மையை சொல்லப்போனால் இந்த sms எங்களை தவிக்க விட்டது.இழந்ததை திரும்ப பெறமுடியாது என்பது தெரியும்....அதனால் நாம் இழந்த கல்லூரி நாட்களை "கள்ளிக் காட்டு பள்ளிக்கூடம்"போன்ற தொடர்களை பார்த்து ஆசுவாசப்படுத்திகொண்டிருந்தோம்....சரியான நேரத்தில் இந்த sms வந்து சேர Get To Gether ஒன்றை வைத்து அனைவரையும் சந்தித்தே தீர வேண்டும் என நண்பன் ரம்ஸான் தொலைபேசி மூலமாக தகவல் தர...ஆரம்பமாகியது அதற்கான திட்டமிடல்களும் ஏற்பாடுகளும்.

ஒருவர் மூலமாக இன்னொருவரை பிடித்து ஒருவாராக அனைவருக்கும் அழைப்பை விடுத்தாகிற்று....நண்பன் ஒருவனின் வீட்டின் கீழ் மாடி காலியாக தான் இருந்தது...அங்கு ஒன்று கூடலாம் எனவும் தீர்மானமாகிவிட்டது...

நாம் ஏதாவதொன்றை ஆரம்பித்தால் அதற்கு தடைகள் வராமலா இருக்கும்....மரண வடிவில் வந்தது தடை ஒன்று....விழாவிற்கு இரண்டே நாட்கள் இருக்கும் போது ஏற்பாடாயிருந்த வீட்டில் இருக்கும் முதியவர் உயிர் துறந்தார்........

செய்வதறியாது நிகழ்வை cancel செய்துவிடலாம் என கூட யோசித்தோம்....அந்த நேரத்தில் நண்பன் ரம்ஸான் "நிகழ்வை cancel செய்ய தேவையில்ல....வேறு எங்காவது சரி நடத்தி விடலாம் என நம்பிக்கை அளிக்கும் வகையில் சிறிது நேரம் தன் பொறுப்புணர்ச்சியை பொங்கினார்.........

குறிக்கப்பட்ட திகதிக்கு முதல் நாள்,நடத்துவதற்கு இடம் தேடி 3 இடங்களுக்கு செல்வது என தீர்மானித்து முதலாவது இடம் நோக்கி சென்றோம் நானும் நண்பன் ரம்ஸானும்.....சென்ற முதலிடமே ok ஆக மகிழ்ச்சி லேசாக எட்டிப்பார்த்தது நம் மத்தியில்........தொடர்ந்து நடக்க வேண்டிய காரியங்களை கவனித்தோம்....அன்றைய நாள் இனிதே நிறைவுற்றது.....

உதயமானது அந்த நன்நாள்.....நேரம் 10 ஆனது.....ஒவ்வொருவராய் வரத்தொடங்கினர்.....19 பேர் தவிர ஏனைய அனைவரும் அன்றைய தினம் நிகழ்வுக்கு ஆஜராகியிருந்தனர்.

வரத்தவறிய 19 பேரில் இருவர் கடல் கடந்து வாழ்ந்து கொண்டிருந்தனர்...ஏனையவர்கள் வராமைக்கான காரணம் இதுவரைக்கும் எங்களுக்கு தெரியவில்லை....

பழைய கதைகள் கிண்டல்....கேலி க்கு மத்தியில் அன்றைய நாள் கழிந்துகொண்டிருன்தது......

நேரம் செல்லச்செல்ல நாள் முடிகிறதே என்னும் கவலை ஒருபுறம் இருந்தாலும்....பழைய நட்பு மீண்டும் கிடைத்தமை குறித்து மகிழ்ந்து கொண்டிருந்தோம் ஒவ்வொருவரும்......

இன்றே மீண்டும் பிரியப்போகிறோம் என்ற உண்மை தெரிந்திருந்தும் அடுத்த வருடமும் இதேபோல் அனைவரும் சந்திப்போம்.....இப்போதிருப்பதை விட எல்லோரும் நல்ல நிலையில் சந்திப்போம் என்னும் நம்பிக்கை மகிழ்ச்சியளித்தது.

நேரம் 4 ஆக வழங்கப்பட்ட Cofee யுடன் விடைப்பெற்றுக்கொண்டோம் கண்ணீருடன்.....

இப்படிப்பட்ட நட்பு எனும் பந்தத்தை எனக்கு வழங்கிய கடவுளுக்கு தனிப்பட்ட முறையில் நன்றி செலுத்த கடமைப்பட்டுள்ளேன் நான்.....

உண்மையை சொல்லப்போனால் அன்று ரம்ஸான் அனுப்பிய அந்த sms தான் மீண்டும் எங்களை சேர வைத்தது.....

அந்த வகையில் ரம்ஸான்.......நீ........."நன்பேண்டா"...........

மீண்டும் ஒரு பதிவில் சந்திக்கும் விடைப்பெறும் நான்-Mithoon.J


Friday, January 7, 2011

கொத்துக் கடை அரசியல்

மாதத்திற்கு 3 முறையாவது இரவு உணவிற்கு ஒன்று கூடுவது எங்கள் நண்பர் குழு வட்டத்தில் பழகிப்போன ஒரு விஷியமாகும்....அப்படி கூடும் பொது முன்பெல்லாம் வெட்டி அரட்டை தான் முன்னிலை வகிக்கும்....ஆனால் இப்போது அந்த நிலை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றம் பெற்று பேசுகிற தலைப்பு ஒரு துளியாவது அர்த்தமுள்ளதாக இருப்பது என்னைப்பொறுத்தவரை மகிழ்ச்சியளிக்கிறது.

ஒவ்வொரு முறையும் நாம் பேசும் அர்த்தமுள்ள விஷியங்களை என் தளத்தில் பகிர்வது என கடைசியாக நாங்கள் பேசியபோது முடிவுசெய்து கொண்டேன்...
அந்த வகையில் சமீபத்தில் "கொத்து"க்காக காத்திருந்த போது பேச ஆரம்பித்த விடயம்....

வெளிமாகாண,மாவட்ட மாணவர்கள் சேர்க்கையினால் பாதிப்படையும் நம் மலைநாட்டு இளைஞர் சமுதாயம்

இந்த தலைப்பு அந்த இடத்தில் எடுபட்டமைக்கு மிக முக்கியமான காரணம் அந்த நேரத்தில் வெளிவந்திருந்த உயர்தர பரீட்சை பெறுபேறுகள் தான்.....
மலையகத்தில் உயர்தர பரீட்சையில் தேறி பல்கலைகழகம் செல்லும் வாய்ப்பை பெற்ற மாணவர்களில் பெரும்பாலானோர் வெளி மாகாண,மாவட்டத்தை சேர்ந்தவர்களாவர்....

வெளி மாகாண,மாவட்ட மாணவர்கள் தம் உயர் கல்விக்காக மலையகத்தை தேர்ந்தெடுக்க திறமையான ஆசிரியர்கள் (குறிப்பிட்டு சொல்வதாயின் மலையகத்தில் பிறந்து இன்றைய காலகட்டத்தில் எண்ணற்ற மலையக மாணவர்களை பல்கலைகழகம் அனுப்பிக் கொண்டிருக்கும் வணிகப்பிரிவு ஆசிரியர் திரு.சக்திவேல் அவர்களை குறிப்பிடலாம்),குறைந்த வெட்டுப்புள்ளி,கற்றலுக்கான சிறப்பான வளங்கள் போன்றவற்றை குறிப்பிடலாம்.

மேற்கூறப்பட்ட வளங்கள் தாராளமாக கொட்டிக்கிடக்கும் மலையகத்தில் மலையக ஆசிரியர்களின் அதீத உழைப்பு வெகுவாக சுரண்டப்பட்டு அவை இலாபமாக வேற்று வடிவில் சென்றடைவது என்னவோ வேறு இடங்களுக்கு தான்.இதற்கான சிறந்த உதாரணமாக கடந்த உயர்தர பரீட்சையை வெற்றிகரமாக தோற்றி பல்கலைகழகம் செல்ல தகுதி பெற்ற 5 சிங்கள மாணவர்கள் மாத்தறை மாவட்டத்தை சேர்ந்தவர்கள்.....என்பதை எடுத்துக்கொள்ளலாம்.

இதற்கு விதிவிலக்காக 2009ம் ஆண்டில் தான் முற்று முழுதாக மலையக மாணவர்கள் உயிரியல்,வணிக பிரிவுகளில் தங்கள் இடங்களை நிரப்பிக்கொண்டு தங்கள் உரிமைகளை வென்று பல்கலைகழகம் சென்றடைந்தனர்.....

நான் படித்த கல்லூரியில் வெளியிட மாணவர்களை சேர்க்க முடியாது....காரணம் முன்பொரு முறை அப்படி சேர்த்ததற்காக அதிபர் அவர்கள் பல தடவை நீதிமன்ற வாசல் ஏறி இறங்கியிருக்கிறார்..எனினும் என் கல்லூரி தவிர சுற்றியிருக்கும் ஏனைய கல்லூரிகளில் வெளியிட மாணவர்களை சேர்ப்பது இன்று ஒரு சாதரணமான விடயமாகி விட்டது...

மலையக சமுதாயம் இன்றும் கூட சொல்லிக்கொள்ளும் அளவு முன்னேற்றத்தை அடையாமைக்கு மிக முக்கிய காரணமாக நான் நோக்குவது இந்த விடயத்தை தான்.இந்த விடயம் இப்படியே செல்லுமாயின் எதிர்கால மலையக சந்ததியினரின் வாழ்க்கை கேள்விக்குறி தான்.....

எனவே மலையக உயர்திரு அரசியல் தலைமைகள் இந்த விடயத்தை சற்றேனும் கவனத்திற்கொண்டு இதற்கு தகுந்த நடவடிக்கை எடுத்து ஒளிமயமான மலையக எதிர்காலத்திற்கு வித்திட வேண்டும் என பணிவுடனும்,தாழ்மையுடனும் கேட்டுக்கொள்கிறேன்.

மீண்டும் "கொத்து"க்காக காத்திருக்கும் சந்தர்ப்பத்தை எதிர்நோக்கி விடைபெறும் இவன்-Mithoon.J

Tuesday, January 4, 2011

Enemy At The Gates

CALL OF DUTY-1 இல் 7 வது Mission மேற்கூறப்பட்ட பெயரில் படமாக 2001 இல் வெளிவந்தது...அந்த Game இன் மீதுள்ள ஆர்வத்தின் காரணமாக இந்த அற்புதமான திரைப்படம் என் கண்களுக்கு விருந்து படைத்தது....

கதையின் பாத்திரங்களின் பெயர்கள் அவ்வளவாக நினைவில் இல்லை எனினும் Vassili Zaitsav,Tania என்ற இரு கதாபாத்திரங்கள் நெஞ்சினை விட்டு அகலாமல் நிற்கின்றன......1942 இல் ஹிட்லர் இன் கை ஓங்கி இருந்த காலத்தில் தான் கதை நகர்கிறது.....

சிறு வயதில் குறி பார்த்து சுடப் பழகிக்கொண்டதால் தக்க தருணத்தில் தன உயர் அதிகாரியை காக்கிறான் Zaitsav....இதன் பின் ராணுவத்தில் மிக முக்கியமான Sniper போராளி ஆகின்றான்...

இதனால் எதிர் படைகளின் குறி Zaitsav ஐ நோக்கி திரும்ப ஆரம்பிக்கிறது கதை
விறு விறு வென கதை நகர Tania என்ற Sniper போராளியுடன் காதல் வயப்படுகிறான் Zaitsav.

இதன் பிறகு என்ன ஆனது!Zaitsav,Tania ஒன்று சேர்ந்தனரா...போரின் முடிவு என்ன என்பதை நான் சொல்வதை விட நீங்கள் பார்த்தே தெரிந்து கொள்வது நல்லது.....

Enemy At The Gates திரைப்படத்தை Torrent இல் இலகுவாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம்......

இத்திரைப்படத்தின் Trailer வருமாறு....



மீண்டும் இது போன்றதொரு சிறந்த திரைப்படத்தின் தகவல்களோடு சந்திப்போம்-இவன்-Mithoon.J.