Sunday, September 13, 2015

யட்சன் - ஓர் பார்வை

வலைப்பதிவு எழுத வந்து 5 வருடங்கள் ஆகிவிட்டது, முதல் வருடத்தில் ஒன்றன் பின் ஒன்றாக நிறைய பதிவுகள் எழுத வைப்புக்கள் அதிகமாக இருந்தன, போகப்போக வாய்ப்புக்கள் குறைய எழுதுவதற்கான சந்தர்ப்பங்களும் குறைந்தாகி விட்டன,, எப்படியோ 5 வருட போராட்டத்திற்கு பிறகு 5௦ வது பதிவிற்காக கீபோர்டை தட்டிக்கொண்டிருக்கிறேன்,,

மிக நீண்ட நாட்களுக்கு பின் திரையரங்குக்கு சென்று ஒரு படம் பார்க்க வாய்ப்பு கிட்டியது..யட்சன்..விஷ்ணுவர்தன் இயக்கத்தில் ஆர்யா , கிருஷ்ணா நடிப்பில் உருவாகி சமீபத்தில் வெளியாகியிருக்கும் திரைப்படம்.


படத்தை பற்றி சொல்லணும் னா ஒரு வரில சொல்லிறலாம் ஜி.முதற்பாதியில் பெரிய அளவு வேகம் இல்லை.இடைவேளைக்கு பிறகு வைக்கப்பட்ட அந்த டுவிஸ்டின் உதவியுடன் சற்று வேகம் எடுக்கின்றது திரைக்கதை,

ஆர்யா இந்தப் படத்தில் கொஞ்சம் கலகலப்பு காட்டியிருக்கிறார், கிருஷ்ணாவின் நடிப்பும் கொஞ்சம் கை கொடுத்திருக்கிறது, படத்தின் ப்ளஸ் பாயிண்டாக தம்பி ராமையா மற்றும் வில்லனாக வரும் அந்த நடிகரை குறிப்பிடலாம்.

வில்லன் நடிகரை பற்றி சொல்லியே ஆக வேண்டும்.இவரின் நடிப்பு கண்டிப்பாக பாராட்டுக்குரியது..மிக யதார்த்தமாக இவர் தனது நடிப்புத்திறனை வெளிக்கொணர்ந்துள்ளார்.

இந்த கதையில் இருக்கும் மைனஸ் பாய்ன்ட் என்னன்னா படம் பார்க்கும் போது Final Destination மற்றும் தமிழில் அழகிய தமிழ் மகன் போன்ற படங்கள் ஞாபகத்துக்கு வந்து விடுகின்றன,

இவற்றை தவிர்த்து திரைக்கதையை நகர்த்தியிருந்தால் படத்தின் வேகம் இன்னும் கொஞ்சம் அதிகமாகியிருக்கும்,..

படம் தொடங்க முன் ரஜினிமுருகன் ட்ரைலர் போட்டாங்க ஜி, அதை பார்த்த உடன் அந்த படத்துக்கான எதிர்ப்பார்ப்பும் அதிகமாயிருச்சு, படம் அடுத்த வாரம் ரிலீஸ்..,, பார்க்கலாம் ரஜினிமுருகன் பற்றியும் பேசலாம்,

நன்றி.

Sunday, January 11, 2015

The Interview - த இன்டர்வீவ் - ஓர் பார்வை

பக்கா ஹாலிவுட் திரைப்படம்,, இதை நான் எழுதிக்கொண்டிருக்கும் போது நிறைய பேர் படத்தை பார்த்திருக்கலாம்,, பார்க்காத ஏனையவர்களுக்காக இந்த பதிவு,,

படத்தில் வரும் கதாப்பாத்திரங்களின் பெயர்கள் வெகு நேரம் மண்டைக்குள் சிறை நிற்க மறுக்கின்றன,, ! , எனினும் திரைக்கதையும் அதனை நகர்த்தியுள்ள இயக்குனரின் நுட்பமான அறிவும் பாராட்டத்தக்கது,

முழு படத்தின் கதையை ஒரு சில வரிகளில் இனி பார்ப்போம்,,

"ஸ்கைலார்க் டுநைட்" மக்களிடையே அதிகம் பிரசித்தி பெற்ற நேர்முகக்காணல் வடிவு தழுவிய நேரடி தொலைகாட்சி நிகழ்ச்சி,,இந்நிகழ்ச்சியில் பிரசித்தி பெற்ற பலரின் உண்மையான முகம் வெளி உலகக்கு தெரிய வந்தமையே இந்நிகழ்ச்சியின் பிரசித்திக்கான காரணமாக அமைகிறது,,


வட கொரிய சர்வாதிகாரிக்கு பிடித்த நிகழ்சிகளில் இதுவும் ஒன்று என இணையத்தளம் செய்தி வெளியிட "டேவ் ஸ்கைலார்க்" இற்கு அந்த சர்வாதிகாரியை தன் நிகழ்ச்சிக்கு கொண்டு வர வேண்டும் என்ற ஆசை உருவாகின்றது,

இதற்கு பின்னால் நடந்த கலாட்டாக்களும், கூத்துக்களும், சூட்சமங்களும் தான் மிகுதிக்கதையை நகர்த்துகின்றன,

இத்திரைப்படம் விறுவிறுவென நகைச்சுவையுடன் நகர்ந்தபோதிலும் , ஒரு சர்வாதிகாரியின் இயல்பான வாழ்வின் உட்பகுதியையும் கோர முகத்தினையும் மிக அழகாக படம் பிடித்து காட்டியிருக்கின்றது,,


ஏனைய நாடுகளின் உட்கட்டமைப்பு விஷயங்களில் அமேரிக்கா தலையீடு குறித்து ஓர் சிறு நகைச்சுவை துணுக்கும் இப்படத்தின் ஒரு காட்சியில் அடங்குகின்றது,,

imdb தரப்படுத்தலில் இப்படத்திற்கு 7.2 புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளன,,என்னைப்பொறுத்த வரை இப்படத்திற்கு 8.1 புள்ளிகள் வழங்கலாம்,,

இத்திரைப்படம் ஓர் சிறந்த பொழுது போக்கு திரைப்படமாக உருவாகியுள்ளது என்பதில் எவ்வித ஐயமும் இல்லை,,


அடுத்த தொகுப்பில் சந்திக்கும் வரை நன்றி கூறி விடைபெறுகின்றேன்

J.Mithoon



Saturday, December 13, 2014

சூரியன் எப்.எம் வழங்கும் உதவும் கரங்கள் - ஓர் பார்வை


சூரியன் எப்.எம் தொடர்ந்து பல வருடங்களாக வருட இறுதியில் டிசம்பர் மாதத்தில் நத்தார் சமயத்தில் ஏழை எளியவர்களுக்கும், இல்லாதவர்களுக்கும், அநாதரவாக கைவிடப்பட்டவர்களுக்கும் உதவும் நோக்கோடு முன்னெடுத்து வரும் அற்புதமான உதவித்திட்டமே இந்த உதவும் கரங்கள் ஆகும்

இந்நிகழ்ச்சித்திட்டமானது அரசியலுக்கு அப்பாற்பட்டு உண்மையான பரிவாலும் , பாசத்தாலும் , அவர்களுக்கு உதவும் நோக்கோடு கருணையும் கரிசனையும் கொண்டு நடாத்தப்படுவதால் பலராலும் பாரட்டப்பட்டுள்ளமை குறிப்படத்தக்கது,

இம்முறை இவர்களின் உதவும் கரங்கள் மலையகத்தை நோக்கி திரும்பியுள்ளமை ஓர் விசேடமான அம்சமாகும்,

ஆம், கடந்த சில மாதங்களுக்கு முன் பாரிய மண்சரிவால் தம் உற்றாரையும் உறவினரையும் இழந்து பொருட்களையும் உடமைகளையும் இழந்து தவிக்கும் சின்னஞ்சிறு பிஞ்சுக் குழந்தைக்களுக்கு உதவும் முகமாக சூரியன் எப்.எம் தன் தீர்மானத்தை திசை திருப்பியுள்ளமை பாராட்டத்தக்க விடயமாகும்

சூரியன் எப்.எம் இன் தரமான நிகழ்சிகளிலும், பிரத்தியேகமாகவும் இந்நிகழ்ச்சி தொடர்பில் கூறி உதவி கோரும் போதும், அச் சிறுவர்கள் தம் பிஞ்சுக் குரல் கொண்டு தமக்கு தேவையானவற்றை சொல்லும் போதும், மனதில் ஒருவித நெருடல் உண்டாவது மறுக்க முடியாத உண்மையாகிறது,

மேலும் இத்திட்டதிற்கு வருடா வருடம் தம் அளப்பரிய ஆதரவினை அளித்து வரும் இலங்கை வாழ் , வெளிநாட்டு வாழ் , தமிழர்கள் , மற்றும் ஏனையவர்கள் பாராட்டுதலுக்குரியவர்களே,

பாதிக்கப்பட்ட மக்கள் , மக்கள் பிரதிநிதிகள் சார்பில் சூரியன் எப்.எம் இன் இந்த நிகரில்லா முயற்சி என்றென்றும் வெற்றி பெற வேண்டும் என்ற அவா கொண்டு மலையகத்தை சேர்ந்த ஓர் தமிழனாய் நன்றிகளை தெரிவித்துக்கொண்டு விடைபெறுகின்றேன்

இவன்
Mithoon.J

Sunday, September 21, 2014

ஆட்டம் ,,, ஓர் அலசல்


குருநாகல் மாநகர வீதிகளின் வாகன நெரிசல் என்பது இன்றைய நாட்களின் தவிர்க்கமுடியாத ஒன்றாகிவிட்டது,,அளவுக்கு அதிகமாகவே வாகனங்களின் நடமாட்டம் அந்நகர சாலைகளை ஆக்கிரமிக்க துவங்கி வெகுநாட்களாகிவிட்டன, வழமை போலவே அன்றும் அதிக பட்ச வாகன நெரிசலில் சிக்கி செய்வதறியாது முழித்துக்கொண்டிருந்தேன்.

"வரும் வழியில் பனி மழையில் பருவ நிலா முகம் நனைக்கும்" - இசைஞானி பாடல்  காதுகளில் மெதுவாய் மெருகேற்ற, பாதையின் மறுமுனையில் நடந்து சென்ற இரண்டு நபர்கள் என் கண்ணில் பட்டனர்,

இது....இவர்களை நான் எங்கேயோ...ஆங்...இது அவர்களே தான்,,, சென்ற வாரம் என் நண்பன் கோகுலனின் குறும்படத்தில் நடிதிருந்த கோகுலனின் நண்பர்கள் தான் இவர்கள்!!!

இதற்கு முன் அறிமுகமில்லாத இரண்டு பேரை பார்ததும் அடயாளம் கண்டு கொள்ள வைத்த அந்த குறும்படம்,,,,,,,



ஆட்டம்,,எனக்கு தெரிந்து இது கோகுலனின் மூன்றாவது குறும்படமாக இருக்க வேண்டும், இதற்கு முன் ராதாவின் காதல், ஸ்விட்ச் என இரு வேறுபட்ட கதைக்களங்களை மையமாக கொண்டு இரு குறும்படங்கள் வெளிவந்திருக்கின்றன,,

ஆட்டம் - ராகுல்,ஷிவா,சுருளி,ஏகா,கவிதா(தொலைபேசி வாயிலாக) கிங் பின் ஆகிய பாத்திரங்களை மையமாக கொண்டு நகர ஆரம்பிக்கின்றது கதை, ராகுல் - சிலபல வருடங்களாக தன் தகுதிக்கேற்ற வேலை தேடி கிடைக்காமல் ஆறு வருடங்களுக்கு பிறகு வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கவும் வீசா மற்றும் கடவுச்சீட்டை பர்ஸில் வைத்து தொலைபேசியில்  தன் நண்பி/காதலியுடன் கதைத்தபடி பஸ்ஸில் ஏறுகின்றான்,, இறங்கும் போது பர்ஸ் மிஸ்ஸிங்!!!

பதட்டத்தின் உச்சியில் ராகுல் நண்பன் ஷிவா விற்கு தகவல் அளித்து வழமையாக சந்திக்கும் இடத்திற்கு வர சொல்லி, ஷிவா வும் அவ்விடம் வர கதை அதன் பிறகு சற்று வேகமாகவே நகர ஆரம்பிக்கிறது ஆட்டம்...

ராகுலின் பர்ஸ் மீண்டும் கிடைத்ததா/? என்ன ஆனது என்பதை நான் கிறுக்கி தெரிந்து கொள்வதை விட நீங்களே பார்த்து ரசிப்பது அதி உத்தமம்,

படத்தில் ஏற்றுக்கொள்ள முடியாத லாஜிக் குகள்\ இருக்கத்தான் செய்கின்றன,, அதில் கிங் பின் எதற்காக ராகுலின் பாஸ்போர்ட், வீசாவை ஆட்டயப்போடனும்? ஏகா விற்கும் கிங் பின் இற்கும் இடையிலான சம்பந்தம்??
இது போல நிறைய இருக்கின்றன,,இவை அனைத்தும் கோகுலனின் அடுத்த குறும்படத்தை இன்னும் கூர்மயாக்கும் கேள்விகளாக இருக்கும் என நம்புகின்றேன்,

கோகுலனை தவிர ஏனையவர்களுக்கு இது முதல் படம் என நினைக்கின்றேன்,எதிர்வரும் காலங்களில் அவர்களின் நடிப்பில் தேர்ச்சி அதிகமிருக்கும் என நினைக்கின்றேன்,,

கிளைமாக்ஸ் டுவிஸ்ட் சூப்பர் டூப்பர் ரகம்,, ஏகாவிடம் ராகுல் எதிர்ப்பார்க்கா நேரம் துப்பாக்கியை நீட்டுவதும்,அந்த துப்பாக்கி ராகுலின் கையில் எப்படி வந்தது என்பதற்க்கு சிறிய பிளாஷ்பேக், என்பன இலங்கை வாழ் மலையக தமிழர்களின் தரமான சிந்தனைக்கு ஓர் எடுத்துக்காட்டு,,

இனிவரும் காலங்களில் கோகுலன் கூட்டணியின் தரமான குறும்படங்களை எதிர்பார்த்து காத்திருக்கும் சாதாரண பாமர ரசிகனாய் விடைப்பெறுகின்றேன்,,

இவன்
J.Mithoon  

Tuesday, April 15, 2014

இளைஞர்களே..சற்றே சிந்தியுங்கள்.

மிக நீண்ட இடைவேளைக்கு பிறகு எழுதுகின்றேன்,இவ்வளவு நாளும் நான் வேலை பார்த்த நிறுவனத்தின் அதிக வேலைப்பழுவும் அதன் பாதிப்பும் தான் என்னை எழுதவிடாமல் தடுத்த முதல் காரணம் என நான் நினைக்கின்றேன்.
இன்றும் கூட என்னை எழுதத் தூண்டியது ஒரு தற்கொலை சம்பவம் தான்.
சமீபத்தில் யாழ்ப்பாணம் செல்ல வேண்டிய ஓர் சூழ்நிலை எற்பட்டது,ஈழத்தமிழ் மண்ணில் என் பார்வைக்கு எட்டிய ஒரு பதாகை என்னை அதிக நேரம் யோசிக்கவைத்தது.

நிரூபன் நவரத்னம்..பெற்றோர்களால் தோழுக்கு மேல் வளர்த்துவிடப்பட்ட ஓர் அப்பாவி,அவசர புத்திக்கார ஈழத்தமிழ் இளைஞன்..தான் காதலியால் கழட்டிவிடப்பட்டதாக கூறி 2014/03/30ம் திகதி முகநூலில் தன் காதல் கதையை எழுதித்தள்ளிவிட்டு முன்னாள் காதலி எனும் பெயரில் குறிப்பிட்ட பெண் தொடர்புடைய 188 புகைப்படங்களை தரவேற்றம் செய்துவிட்டு மறுநாள் காலை உயிர்துறந்த சம்பவம் யாழ் மண்ணயே சற்று உலுக்கித்தான் போட்டது.

பிறர் சொந்தக்கதையை வர்ணிப்பதோ,அதைப்பற்றி குறிப்பிடுவதோ,என் நோக்கமல்ல அதற்க்கான உரிமையும் என்னிடம் இல்லை.ஆனால் இன்றைய இளைஞர்கள் இத்தகைய முடிவை நோக்கி செல்வதால் பாதிக்கப்படுவது சக சமுதாயமே எனும் அக்கறை தன் என்னை யோசிக்கவைக்கின்றது,

இவ்வளவும் செய்த பின் குறிப்பிட்ட இளைஞனின் கதி என்ன?? அதையும் விட அவன்,அவள்,குடும்பங்களின் நிலை தான் என்ன??..கேள்விக்கணைகள் துரத்திக்கொண்டு தான் இருக்கின்றன,

இலங்கை வாழ் தமிழ் இளைஞர்களே,சற்றே நிதானித்து,சிந்தித்து முடிவெடுங்கள்.

நாளை உலகம் நாம் கையில்,
அன்புடன்
Mithoon.J

Tuesday, April 23, 2013

எங்கே போகுது நம் இலங்கை திருநாடு???

வீட்டில் முற்றத்தில் மாலை தேநீருடன் அனைவரும் கதை பேசிக்கொண்டிருந்தோம்.....

அந்த நேரம் அப்பா சொன்ன ஒரு கதை என் மனதை இன்னும் கூடத்தான் நெருடிக்கொண்டிருக்கின்றது....

அது.....மட்டக்களப்பு-செங்கலடி இரட்டை கொலை வழக்கு சம்பவம்.....அப்பா விஷயத்தை தெரிந்து கொண்டது முகப்புத்தகம் மூலமாக...என்று சொன்னதும்...நானும் இணையத்தில் அந்த சம்பவம் தொடர்பான கட்டுரையை தேடி கண்டுபிடித்து படிக்க ஆரம்பித்தேன்...ஒரு பள்ளிப்பருவ காதல் அன்புமிக்க பெற்றோரை ஈவு இரக்கமின்றி எப்படியெல்லாம் பழிதீர்த்துக்கொண்டது என்பதை அந்த கட்டுரையில் தெள்ளத்தெளிவாக வாசித்து அறிந்துகொண்டேன்...
                                           

கொலைக்கு தூண்டுகோலாக செயற்பட்ட மகள் 

இந்த காலத்து மாணவர்கள் காதலுக்காக இந்த அளவு கூட இறங்கி வேலை பார்ப்பார்களா என்பதை நினைக்கும் பொது சற்று வியப்பாகவும் உள்ளது...

                               

கொலையான தாய்,தந்தை

அந்த சம்பவம் தொடர்பான விரிவான கட்டுரையை வாசிக்க இங்க கிளிக்கவும் ...

இந்த சம்பவம் எனக்கு இன்னுமொரு முக்கொலை சம்பவத்தையும் நினைவூட்டியது...அது கொழும்பு-வெள்ளவத்தை முக்கொலை சம்பவம்...

                          
                                            கொலையான தாய்,தந்தை,மகள்
                                                         

அந்த சம்பவம் கூட தன் தகுதிக்கு மீறி கடன் பட்டு சுகபோக வாழ்க்கையை அனுபவித்து விட்டு பின் தன் தந்தைக்கு கிடைத்த ஊழியர் சேமலாப நிதியை குறிவைத்து மேட்கோள்ளப்பட்டது தான்...

                               
கொலையாளி மகன் - ப்ரஷான் குமாரசாமி 

இப்படி பணத்துக்காகவும்,காதலுக்காகவும் பெற்ற தாய்,தந்தையையே  செய்ய துணிந்துவிட்ட இன்றைய சமூகத்தை நினைக்கும் பொழுது என் மனதில் துளிர் விட்ட அந்த கேள்வி தான்...

"எங்கே போகுது நம் இலங்கை திருநாடு???"

இப்படிக்கு - Mithoon.j.


Sunday, March 17, 2013

இலங்கைக்கு எதிரான பொருளாதாரத் தடை!!!!!!

இலங்கைக்கு எதிராக பொருளாதார தடையை கொண்டுவர இந்திய அரசு சார்பாக கைச்சாத்திட வேண்டி நாளை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் உண்ணாவிரதம்.........சன் டீவி  செய்திகள் கம்பீரமாக ஒழித்துக்கொண்டிருக்க அதை பார்த்துக்கொண்டிருக்கும் இலங்கை தமிழர்களின் மனம் கொந்தளித்துக்கொண்டிருக்கிறது வேறொரு பக்கம்..

தமிழர்களை முற்றாக அழிக்க முட்டாள் தனமான செய்கைகளில் ஈடுபட்டு வரும் சிங்கள கயவர்களின் மேல் உள்ள கோபத்தில் இந்திய தமிழர்களின் இது போன்ற செயற்பாடுகளால் பாதிக்கப்படப்போவது எஞ்சியிருக்கும் தமிழ் மக்களும் நல்ல இதயம் கொண்ட சிங்கள மக்களுமே என்பதை இது போன்ற காரியங்களை செய்ய துணிவதற்கு முன் யாருமே யோசிப்பதில்லை....

மேலும் இலங்கைக்கு எதிராக பொருளாதாரத்தடை கொண்டுவரும் பட்சத்தில் இலங்கைக்கான இறக்குமதி ஏற்றுமதி கொடுக்கல் வாங்கல்களை ஏற்கனவே பொருளாதாரத்தடை அமுலில் உள்ள உகாண்டா போன்ற நாடுகளுடன் மாத்திரமே செய்துகொள்ள முடியும் என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விடயமாகும் ...

ஏதோ எனக்கு சொல்லனும் னு தோணுச்சு சொல்லிட்டேன்....இனி என்னவெல்லாம் நடக்க போகுதுன்னு பொறுத்திருந்து தான் பார்க்கணும்...