Saturday, December 13, 2014

சூரியன் எப்.எம் வழங்கும் உதவும் கரங்கள் - ஓர் பார்வை


சூரியன் எப்.எம் தொடர்ந்து பல வருடங்களாக வருட இறுதியில் டிசம்பர் மாதத்தில் நத்தார் சமயத்தில் ஏழை எளியவர்களுக்கும், இல்லாதவர்களுக்கும், அநாதரவாக கைவிடப்பட்டவர்களுக்கும் உதவும் நோக்கோடு முன்னெடுத்து வரும் அற்புதமான உதவித்திட்டமே இந்த உதவும் கரங்கள் ஆகும்

இந்நிகழ்ச்சித்திட்டமானது அரசியலுக்கு அப்பாற்பட்டு உண்மையான பரிவாலும் , பாசத்தாலும் , அவர்களுக்கு உதவும் நோக்கோடு கருணையும் கரிசனையும் கொண்டு நடாத்தப்படுவதால் பலராலும் பாரட்டப்பட்டுள்ளமை குறிப்படத்தக்கது,

இம்முறை இவர்களின் உதவும் கரங்கள் மலையகத்தை நோக்கி திரும்பியுள்ளமை ஓர் விசேடமான அம்சமாகும்,

ஆம், கடந்த சில மாதங்களுக்கு முன் பாரிய மண்சரிவால் தம் உற்றாரையும் உறவினரையும் இழந்து பொருட்களையும் உடமைகளையும் இழந்து தவிக்கும் சின்னஞ்சிறு பிஞ்சுக் குழந்தைக்களுக்கு உதவும் முகமாக சூரியன் எப்.எம் தன் தீர்மானத்தை திசை திருப்பியுள்ளமை பாராட்டத்தக்க விடயமாகும்

சூரியன் எப்.எம் இன் தரமான நிகழ்சிகளிலும், பிரத்தியேகமாகவும் இந்நிகழ்ச்சி தொடர்பில் கூறி உதவி கோரும் போதும், அச் சிறுவர்கள் தம் பிஞ்சுக் குரல் கொண்டு தமக்கு தேவையானவற்றை சொல்லும் போதும், மனதில் ஒருவித நெருடல் உண்டாவது மறுக்க முடியாத உண்மையாகிறது,

மேலும் இத்திட்டதிற்கு வருடா வருடம் தம் அளப்பரிய ஆதரவினை அளித்து வரும் இலங்கை வாழ் , வெளிநாட்டு வாழ் , தமிழர்கள் , மற்றும் ஏனையவர்கள் பாராட்டுதலுக்குரியவர்களே,

பாதிக்கப்பட்ட மக்கள் , மக்கள் பிரதிநிதிகள் சார்பில் சூரியன் எப்.எம் இன் இந்த நிகரில்லா முயற்சி என்றென்றும் வெற்றி பெற வேண்டும் என்ற அவா கொண்டு மலையகத்தை சேர்ந்த ஓர் தமிழனாய் நன்றிகளை தெரிவித்துக்கொண்டு விடைபெறுகின்றேன்

இவன்
Mithoon.J